• Download mobile app
07 May 2025, WednesdayEdition - 3374
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் தனியார் நிறுவன ஊழியரை கொலை செய்த 4 பேர் கைது

August 31, 2021 தண்டோரா குழு

மதுக்கரை அருகே தனியார் நிறுவன ஊழியரை கொலை செய்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். பழிக்குப்பழியாக நடந்ததா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கோவை அடுத்த மதுக்கரை அருகே உள்ள போடிபாளையம் பகுதியை சேர்ந்தவர் ஆறுச்சாமி. இவரது மகன் ரமேஷ் ( 23). இவர் கருமத்தம்பட்டியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு இவர் நண்பர்களுடன் வெளியே சென்று விட்டு மீண்டும் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.

அப்போது மதுக்கரை போடிபாளையம் அருகே வழிமறித்த சில நபர்கள் திடீரென்று ரமேசின் கழுத்து, வயிறு தோள்பட்டை உள்ள இடங்களில் அரிவாளால் வெட்டியதுடன், கத்தியால் குத்தி கொலை செய்தனர். இந்த சம்பவம் குறித்து மதுக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அத்துடன் மர்ம ஆசாமிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த நிலையில் சந்தேகத்தின் பேரில் அதேப்பகுதியை சேர்ந்த ரகு கிருஷ்ணன் (22), உதயகுமார் (28), சந்தோஷ் (25), சஞ்சீவ்குமார் (24) ஆகியோரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.அதில் அவர்கள், ரமேசை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

மேலும் கடந்த ஜூன் மாதம் போடிபாளையம் பகுதியில் போதை ஊசி பிரச்சினையில் ஜீவானந்தம் என்பவரை மணிகண்டன் கொலை செய்தார்.இதற்கு பழிக்குப்பழி வாங்கும் நோக்கில் ஜீவானந்தத்தின் உறவினர்களாக உதயகுமார், சந்தோஷ், சஞ்சீவ்குமார், நண்பர் ரகுகிருஷ்ணன் ஆகிய 4 பேரும் ரமேசை வெட்டிக் கொலை செய்தார்களா? அல்லது வேறுகாரணமா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க