• Download mobile app
13 Nov 2025, ThursdayEdition - 3564
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பாராலிம்பிக்ஸ் போட்டியில் மீண்டும் பதக்கம் வென்றார் மாரியப்பன் தங்கவேலு !

August 31, 2021 தண்டோரா குழு

பாராலிம்பிக் உயரம் தாண்டுதல் போட்டியில் 2 வது முறையாக பதக்கம் வென்று மாரியப்பன் தங்கவேலு அசத்தியுள்ளார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் பாராலிம்பிக்ஸ் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று உயரம் தாண்டுதலில் இந்தியா 2 பதக்கங்களை வென்றது.

டி-42 பிரிவில் 1.86 மீ. உயரம் தாண்டி வெள்ளி வென்றார் தமிழ்நாட்டு வீரர் மாரியப்பன்.1.83 மீ. உயரம் தாண்டி பீகாரை சேர்ந்த சரத்குமார் வெண்கலப்பதக்கம் வென்றார்.அமெரிக்க வீரர் கீரிவ் சாமுடன் கடும் போட்டி நிலவிய நிலையில் வெள்ளி வென்றார் மாரியப்பன்.

2016 ரியோ பாராலிம்பிக்கை தொடர்ந்து இரண்டாவது முறையாக டோக்யோ பாராலிம்பிக்கிலும் பதக்கம் வென்று தமிழ்நாட்டை சேர்ந்த இந்திய வீரர் மாரியப்பன் தங்கவேலு சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க