• Download mobile app
05 Jun 2026, FridayEdition - 3768
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

முத்திரை வரி விலக்கு சலுகையை அமல்படுத்த கோரிக்கை

August 26, 2021 தண்டோரா குழு

கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு (போசியா) சார்பில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

கொரோனா தாக்கத்திலிருந்து தொழில் துறையை மீட்கும் வகையில் தமிழகத்தில் புதிய அரசு ஆட்சிக்கு வந்தவுடன் தொழில் அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் வர்த்தக அமைப்புகளின் பிரதிநிதிகளை அழைத்து கடந்த மே மாதம் ஆலோசனை நடத்தியது.

அந்த ஆலோசனைக்கு பிறகு 2021ம் ஆண்டு மே மாதம் 11ம் தேதியிட்டு வெளியிடப்பட்ட அரசாணையில், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பெறும் புதிய கடன்களுக்கு செலுத்த வேண்டிய முத்திரை வரி மற்றும் பதிவுக் கட்டணத்தில், முத்திரை வரிக்கு மட்டும் நடப்பாண்டு இறுதி வரை விலக்கு அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் அரசாணையில் வெளியிடப்பட்ட அறிவிப்பானது இதுவரை அமலுக்கு வரவில்லை. இதனால் புதிதாக கடன் பெறும் சிறு, குறு நிறுவனங்கள் அரசால் கொண்டு வரப்பட்ட இந்த சலுகையின் கீழ் பயன்பெற முடியாத நிலை உள்ளது. மேலும் இந்நிறுவனங்கள் வழக்கமான முத்திரை வரி மற்றும் பதிவுக் கட்டணத்தை செலுத்த வலியுறுத்தப்படும் நிலை உள்ளது.

எனவே தமிழக முதல்வர் இவ்விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு மேற்கூறப்பட்ட அரசாணையை அமல்படுத்த நடவடிக்கை எடுப்பதுடன், இந்த முத்திரை வரி விலக்கு சலுகையை வரும் 2022-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதி நடப்பு நிதியாண்டு முடியும் வரை நீட்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க