• Download mobile app
18 Aug 2025, MondayEdition - 3477
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

August 24, 2021 தண்டோரா குழு

போக்குவரத்துத் துறையில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவை மண்டல அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் சங்கம்( சி.ஐ.டி.யூ) சார்பில் கோவை மண்டல போக்குவரத்து தலைமை அலுவலுலம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில்,போக்குவரத்து பணிமனைகளுக்கு தேவையான உதிரிபாகங்களை வழங்கிட வேண்டும். காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். போக்குவரத்து தொழிலாளர்கள் மீதான பழிவாங்கும் நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும். விபத்து ஏற்படுத்தியதாக ஓட்டுநர்களுக்கு பணி மாறுதல் உத்தரவு வழங்கப்பட்டதை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கோவை மண்டல சி.ஐ.டி.யூ. அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் சங்க தலைவர் பரமசிவம் தலைமை தாங்கினார். பொதுசெயலாளர் வேளாங்கண்ணிராஜ், ஈரோடு மண்டல பொதுசெயலாளர் ஜான்சன் கென்னடி, திருப்பூர் மண்டல தலைவர் கந்தசாமி, நீலகிரி மாவட்ட தலைவர் சுந்தரம், அரசு விரைவு போக்குவரத்து கழக மாநில பொதுச் செயலாளர் கனகராஜ் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 400 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க