• Download mobile app
18 Aug 2025, MondayEdition - 3477
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் கொரோனா தடுப்பூசி மையம் திறப்பு!

August 23, 2021 தண்டோரா குழு

கோவை அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் கொரோனா தடுப்பூசி மையத்தை மாவட்ட ஆட்சியர் சமீரன் இன்று துவக்கி வைத்தார்.

தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்கும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது இதில் தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரப்படுத்தி உள்ளனர். தடுப்பூசி போட்டுக்கொள்ள பலர் ஆர்வம் காட்டி வருகின்றனர் பிற மாநிலங்கள், நாடுகளுக்கு செல்லவும் தடுப்பூசி செலுத்திய சான்றிதழ் தேவைப்படுகிறது. ஆனால் தடுப்பூசி உரிய நேரத்தில் கிடைக்காமல் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

இந்த நிலையில் பொதுமக்களுக்கு 24 மணி நேரமும் கொரோனா தடுப்பு ஊசி செலுத்தும் வகையில் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 24 மணி நேர தடுப்பூசி மையத்தை இன்று மாவட்ட கலெக்டர் சமீரன் திறந்து வைத்தார்.

இதுகுறித்து ஆட்சியர் சமீரன் கூறும்போது,

அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் உள் நோளிகள் அவர்களுடன் இருக்கும் உறவினர்கள், மாற்றுத்திறனாளிகள், 80 வயதுக்கு மேற்பட்டவர்கள், புற நோயாளிகள் பிரிவில் சிகிச்சைக்காக வரும் நபர்களுக்கு 24 மணி நேரமும் தடுப்பூசி செலுத்தும் வகையில் அரசு மருத்துவமனையில் தடுப்பூசி மையம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

இதனால் தடுப்பூசி முகாம் ஏற்படும் கூட்ட நெரிசல் குறையும்.மேலும் இஎஸ்ஐ மருத்துவமனை பிற அரசு மருத்துவமனையில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது என்று கூறினார்.

மேலும் படிக்க