• Download mobile app
30 Mar 2026, MondayEdition - 3701
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் கோவையில் விற்பனை பத்திரம் பெற 3 நாட்கள் சிறப்பு முகாம்

August 21, 2021 தண்டோரா குழு

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், கோவை வீட்டு வசதி பிரிவிற்குட்பட்ட கோவை, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களில் ஒதுக்கீடு பெற்று விற்பனை பத்திரம் பெறாமல் உள்ள மனைகள், வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளின் ஒதுக்கீடுதாரர்களுக்கு வரும் 24, 25 மற்றும் 26ம் தேதிகளில் விற்பனை பத்திரம் வழங்கும் சிறப்பு முகாம் கோவை வீட்டு வசதிப் பிரிவு, டாடாபாத், அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

இந்த வாய்ப்பை பயன்படுத்தி முழுத் தொகை செலுத்தியவர்களும் மற்றும் நிலுவைத் தொகை செலுத்தாதவர்கள் முழுத் தொகை செலுத்தியும் விற்பனை பத்திரம் பெற்றுக் கொள்ளலாம். இந்த தகவலை கோவை வீட்டு வசதி பிரிவு செயற்பொறியாளர் கரிகாலன் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க