• Download mobile app
11 Feb 2026, WednesdayEdition - 3654
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பார்க்கிங்கில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 4 பைக்குகள் திருட்டு ஒருவர் கைது, ஒரு பைக் மீட்பு

August 14, 2021 தண்டோரா குழு

கோவையில் வெவ்வேறு பகுதிகளில் பார்க்கிங்கில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 4 பைக்குகள் ஒரே நாளில் திருடு போய் உள்ளன.

கோவை கெம்பட்டி காலனி பகுதியை சேர்ந்தவர் மகேஸ் குமார்(41). அவர் தனது பைக்கை கெம்பட்டி காலனி பகுதியில் நிறுத்தி வைத்திருந்த போது அதை போத்தனூரை சேர்ந்த ஷேக் பக்ருதீன் திருடியுள்ளார். அவரை கையும் களவுமாக பிடித்து பஜார் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். பஜார் போலீசார் வழக்கு பதிவு செய்து ஷேக் பக்ரூதினை கைது செய்தனர்.

அதே போல் ஆர்.எஸ்.புரம், காட்டூர், ரேஸ் கோர்ஸ் பகுதியிலும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 பைக்குகள் திருடு போய் உள்ளன. இது குறித்து அப்பகுதி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க