• Download mobile app
11 Feb 2026, WednesdayEdition - 3654
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி இருவர் மீது வழக்கு பதிவு

August 14, 2021 தண்டோரா குழு

கோவை ரத்தினபுரி பகுதியை சேர்ந்தவர் ரவி(61).இவர் தனது மகனுக்கு வெளிநாட்டில் வேலை வேண்டி ஏ.டி.டி காலனியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ரூ.2 லட்சம் காசோலையாகவும், ரூ.20 ஆயிரம் பணமாகவும் கடந்த 2019 ம் ஆண்டு வழங்கியுள்ளார்.

இதனிடையே இரண்டு ஆண்டுகளாக வேலை தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் தனது மனைவியுடன் அந்த நிறுவனத்திற்கு சென்று பணத்தை திருப்பி கேட்டுள்ளார்.

அந்நிறுவனத்தை சேர்ந்த பிரசாந்த், பாரதி ஆகியோர் பணத்தை தரமறுத்து இவர்கள் இருவரையும் தகாத வார்த்தையால் பேசியும், தாக்கியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ரேஸ் கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க