• Download mobile app
11 Feb 2026, WednesdayEdition - 3654
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சம்பளம் வழங்குவதில் தாமதம்; தூய்மைப் பணியாளர்கள் அவதி மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

August 11, 2021 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களுக்கு இம்மாதத்திற்கான சம்பளம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அதனை ஒப்பந்ததாரர்களிடம் இருந்து பெற்று தர மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒப்பந்த தொழிலாளர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை மாநகராட்சியில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் பணி புரிந்து வருகின்றனர்.இவர்களுக்கு ஒப்பந்ததாரர்கள் மூலம் ஒவ்வொரு மாதமும் 10ம் தேதிக்குள் சம்பளம் வழங்கப்பட்டு வந்ததது. ஆனால் கடந்த சில மாதங்களாக தூய்மைப் பணியாளர்களுக்கு சம்பளம் 10ம் தேதிக்குள் வழங்கப்படுவதில்லை. மிகவும் தாமதமாக 20ம் தேதிக்கு மேல்தான் வழங்கப்பட்டு வருகிறது என தூய்மைப் பணியாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இதனிடையே இம்மாதம் 10ம் தேதி கடந்தும் கூட தற்போது வரை ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை. இதனால் தூய்மைப் பணியாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இது குறித்து தூய்மைப் பணியாளர்கள் கூறுகையில்,

‘‘ஒவ்வொரு மாதம் சம்பளம் வழங்குவதில் ஏற்படும் தாமதம் காரணமாக பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகிறோம். வீட்டுக்கு மளிகை பொருட்கள் வாங்குவதிலிருந்து, வாகனங்களுக்கு பெட்ரோல் போடுவது வரை மிகவும் கடினமான சூழ்நிலையை சந்தித்து வருகிறோம். மாநகராட்சி நிர்வாகம் ஒப்பந்ததாரர்களிடம் இருந்து உடனடியாக சம்பளத்தை பெற்று தருமாறு கேட்டுக்கொள்கிறோம்’’ என்றனர்.

மேலும் படிக்க