• Download mobile app
18 Aug 2025, MondayEdition - 3477
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஒரு மாதத்திற்குள் கூட 3 வது அலை வர வாய்ப்புண்டு – சிறப்பு அதிகாரி சித்திக்

August 9, 2021 தண்டோரா குழு

கோவையில் 3 வது அலையால் அதிகளவு பாதிப்பு இருக்க வாய்பபுண்டு இதை எதிர்கொள்ள தயாராக இருக்கவேண்டும் என சிறப்பு அதிகாரி சித்திக் கூறியுள்ளார்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு கண்காணிப்பு அலுவலரும், வணிக வரித்துறை ஆணையருமான சித்திக் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர்,

கோவை மாவட்டத்தில் சராசரியாக 200 புதிய நபர்கள் கொரொனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கோவையில் மக்களுக்கு கொரொனா எதிர்ப்பு சக்தி 43 சதவீதமாக இருக்கின்றது. சென்னையில் கோவிட் எதிர்ப்பு சக்தி 78 சதவீதமாக இருக்கின்றது. எதிர்ப்பு சக்தி 43 சதவீதமாக இருப்பதால்
கோவையில் 3 வது அலையால் அதிகளவு பாதிப்பு இருக்க வாய்ப்புண்டு என்று தெரிவித்தார்.அதை எதிர்கொள்ள தயாராக இருக்கவேண்டும் என கூறினார்.

மேலும்,ஒரு மாதத்திற்குள் கூட 3 வது அலை வர வாய்ப்புண்டு எனவும் தெரிவித்தார்.முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும், தேவையற்ற பயணத்தை தவிர்க்க வேண்டும். தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் இருந்து வருவது முழு ஊரடங்கை தவிர்கும். கோவைக்கு தடுப்பூசிகள் அதிகம் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.

கோவையில் அரசு மருத்துவமனை, இ.எஸ்ஐ மருத்துவமனைகளில் கூடுதல் படுக்கைகள் தயார் செய்யப்பட்டுள்ளது.ஆக்ஸிஜன் டேங்க் ஓன்று சென்னையில் இருந்து கோவை மருத்துவமனைக்கு மாற்றப்படுகின்றது.இந்த முறை குழந்தைகளுக்கு பாதிப்பு வந்தால் அதை எதிர் கொள்ள தயாராக இருக்கின்றோம்.அரசு மருத்துவமனையில் குழந்தைகளுக்கு 124 ஆக்ஸிஜன் படுக்கைகளும், 82 ஐ.சி.யு படுக்கைகள் இ.எஸ்.ஐ மரித்துவமனையில்
ஆக்ஸிஜன் படுக்கை 40ம்,ஐ.சி.யு படுக்கைகள் 30ம் குழந்தைகளுக்கு தயாராக இருக்கின்றது என தெரிவித்தார்.

பேட்டியின் போது மாவட்ட ஆட்சியர் சமீரன், மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுங்கரா ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் படிக்க