• Download mobile app
30 Mar 2026, MondayEdition - 3701
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஓவியங்கள் வரையப்பட்ட சுவற்றில் சுவரொட்டிகள் ஒட்டினால் நடவடிக்கை – மாநகராட்சி ஆணையர்

August 4, 2021 தண்டோரா குழு

மாநகராட்சி சுவர்களில் வரையப்பட்ட ஓவியங்கள் மீது சுவரொட்டிகள் ஒட்டினால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா எச்சரித்துள்ளார்.

கோவை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள அரசு அலுவலகச் சுவர்கள், பாலங்கள், சாலையோரச் சுவர்களில் வணிக நிறுவனங்களின் விளம்பரச் சுவரொட்டிகள், அரசியல் கட்சியினரின் சுவரொட்டிகள் ஒட்டப்படுவது வழக்கமாக உள்ளது.

இந்நிலையில், அரசுச் சுவர்களில் சுவரொட்டிகள் ஒட்டப்படுவதைத் தடுக்க மாநகராட்சி நிர்வாகம் சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, முதல்கட்டமாக, மாநகராட்சி அலுவலகச் சுவர்களில் சுவரொட்டிகள் ஒட்டுவதைத் தடுக்க,அந்த சுவர்களில் தமிழர்களின் வீரம், பாரம்பரியம், கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் ஓவியங்கள், விழிப்புணர்வு ஓவியங்களை வரைய மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து, கடந்த 2 நாள்களாக மத்திய மண்டலப் பகுதிகளில் உள்ள சுவர்களில், சுவரொட்டிகள் அனைத்தும் அகற்றப்பட்டு ஓவியங்கள் வரையும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணிகளை மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா செவ்வாய்க்கிழமை பார்வையிட்டு, மக்களைக் கவரும் விதமான ஓவியங்களை வரைய அறிவுறுத்தினார். வரையப்பட்ட ஓவியங்கள் மீது மீண்டும் சுவரொட்டிகள் ஒட்டும் நபர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளவும் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் படிக்க