• Download mobile app
10 May 2025, SaturdayEdition - 3377
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஓவியங்கள் வரையப்பட்ட சுவற்றில் சுவரொட்டிகள் ஒட்டினால் நடவடிக்கை – மாநகராட்சி ஆணையர்

August 4, 2021 தண்டோரா குழு

மாநகராட்சி சுவர்களில் வரையப்பட்ட ஓவியங்கள் மீது சுவரொட்டிகள் ஒட்டினால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா எச்சரித்துள்ளார்.

கோவை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள அரசு அலுவலகச் சுவர்கள், பாலங்கள், சாலையோரச் சுவர்களில் வணிக நிறுவனங்களின் விளம்பரச் சுவரொட்டிகள், அரசியல் கட்சியினரின் சுவரொட்டிகள் ஒட்டப்படுவது வழக்கமாக உள்ளது.

இந்நிலையில், அரசுச் சுவர்களில் சுவரொட்டிகள் ஒட்டப்படுவதைத் தடுக்க மாநகராட்சி நிர்வாகம் சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, முதல்கட்டமாக, மாநகராட்சி அலுவலகச் சுவர்களில் சுவரொட்டிகள் ஒட்டுவதைத் தடுக்க,அந்த சுவர்களில் தமிழர்களின் வீரம், பாரம்பரியம், கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் ஓவியங்கள், விழிப்புணர்வு ஓவியங்களை வரைய மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து, கடந்த 2 நாள்களாக மத்திய மண்டலப் பகுதிகளில் உள்ள சுவர்களில், சுவரொட்டிகள் அனைத்தும் அகற்றப்பட்டு ஓவியங்கள் வரையும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணிகளை மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா செவ்வாய்க்கிழமை பார்வையிட்டு, மக்களைக் கவரும் விதமான ஓவியங்களை வரைய அறிவுறுத்தினார். வரையப்பட்ட ஓவியங்கள் மீது மீண்டும் சுவரொட்டிகள் ஒட்டும் நபர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளவும் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் படிக்க