• Download mobile app
10 May 2025, SaturdayEdition - 3377
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இரத்தினம் கல்வி குழுமத்துடன் , மாலிக்குலார் கனக்சன்ஸ் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம்

August 3, 2021 தண்டோரா குழு

இரத்தினம் கல்வி குழுமத்துடன் மாலிக்குலார் கனக்சன்ஸ் நிறுவனம்,உயிரியல் மற்றும் நானோ தொழில்நுட்பம் ஆராய்ச்சிக் கூடம் ஆகியவை இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டனர்.

மாணவர்கள் கல்லூரியில் பயிலும் போதே திறனாய்வை வளர்க்கும் விதமாகவும் மேலும் துறை சார்ந்த நடைமுறை பணி குறித்த அறிவை மேம்படுத்தவும் பல்வேறு நிறுவனங்களுடன் இரத்தினம் கல்வி குழுமம் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை செய்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக கோவையை சேர்ந்த மாலிக்குலார் கனக்சன்ஸ் பிரைவேட் லிமிடட் நிறுவனம்,மற்றும் உயிரியல் மற்றும் நானோ தொழில்நுட்பம் ஆராய்ச்சிக் கூடம் ஆகியவற்றுடன் இணைந்து இரத்தினம் கல்வி குழுமம் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் பையெழுத்திடப்பட்டது.

இரத்தினம் கல்வி குழுமங்களின் தலைவர் முனைவர் மதன்.ஆ. செந்தில் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாலிக்குலார் கனக்ஸன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிறுவனரும்,முதன்மை நிர்வாக இயக்குனருமான ஜிக்னேஷ் பாட்டே,உயிரியல் மற்றும் நானோதொழில்நுட்பம் ஆராய்ச்சிக் கூடத்தின் இயக்குநர் முனைவர் R ரகுநாதன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

தொடர்ந்து இரத்தினம் தொழில்நுட்ப வளாகத்தில் புதிதாக துவங்கப்பட்ட உயிரி தொழில்நுட்பவியல் மையத்தை மாலிக்குலார் கனக்ஸன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிறுவனரும் முதன்மை நிர்வாக இயக்குனருமான ஜிக்னேஷ் பாட்டே திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில்,இரத்தினம் தொழில்நுட்ப வளாகத்தின் முதன்மை நிர்வாகி முனைவர், நித்தியானந்தம், முதல்வர் முனைவர்.பி.நாகராஜ் இரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதன்மை நிர்வாக அதிகாரி முனைவர்.R.மாணிக்கம், முதல்வர் முனைவர் முரளிதரன், மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் துறை துறைத் தலைவர் பேராசிரியர் கீதா,கட்டிடவியல் துறைத் தலைவர் முனைவர் – கிருஷ்ண குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க