• Download mobile app
03 May 2024, FridayEdition - 3005
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை பேரூர் பெரியகுளத்தில் மியாவாக்கி முறையில் 2 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டன

August 2, 2021 தண்டோரா குழு

கோவை பேரூர் பெரியகுளத்தில் மியாவாக்கி முறையில் 2 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டன.

கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மணிகண்டனுக்கு மத்திய ஜல் சக்தி அமைச்சகம் வாட்டர் வாரியர் எனும் விருது வழங்கியது.இந்த விருதுடன், விருது தொகையாக 2 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.

இந்த விருது தொகையுடன் தன்னார்வ அமைப்புகளின் உதவியோடு, பேரூர் பெரியகுளக்கரையில் மரக்கன்று நடவு செய்ய திட்டமிடப்பட்டது. மேலும், அமைப்பின் 200வது வாரக் களப்பணியும் நடந்ததையடுத்து, அதில் 200 வகையான மரக்கன்றுகள் வைத்து, மியாவாக்கி முறையில் 2 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது. இதற்கு வாட்டர் வாரியர் அடர் வனப்பூங்கா என பெயரிடப்பட்டுள்ளது.

இதற்காக குளங்களில் இருந்து எடுக்கப்பட்ட 25 லோடு ஆகாயத்தாமரை கழிவுகளை அடியுரமாக கொட்டப்பட்டு, மூன்று பக்கங்களுக்கு வேலியிட்டு செடிகளுக்கு சொட்டு நீர் பாசன வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இதற்காக 6.5 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

200 வகையான மரக்கன்றுகள் தமிழகம் மற்றும் கேரளாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து நாட்டு வகை மரங்கள் சேகரிக்கப்பட்டு எடுத்து வரப்பட்டன. இந்நிகழ்வில் தன்னார்வலர்கள், விரைவு அதிரடிப் படையினர், மற்றும் என்சிசி மாணவர்கள் கலந்து கொண்டு சமூக இடைவெளியுடன் மரக்கன்றுகள் நட்டனர்.

மேலும் படிக்க