• Download mobile app
10 May 2025, SaturdayEdition - 3377
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ரிசர்வ் சைட்டுகளில் அடர்வனம் அமைக்க மாநகராட்சி நிர்வாகம் திட்டம்

July 31, 2021 தண்டோரா குழு

கோவை மாநகராட்சிக்குட்பட்ட இடங்களில் உள்ள ரிசர்வ் சைட்டுகளில் அடர்வனம் அமைக்க மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

கோவை மாநகர் பகுதிகளில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து கொண்டே செல்கிறது.இதன் காரணமாக சாலைகள் விரிவாக்கம் செய்யப்படுகின்றன. பல இடங்களில் மேம்பாலங்களும் அமைக்கப்பட்டு வருகின்றன.இதன் காரணமாக மாநகர் பகுதிகளில் வெப்பம் அதிகரித்து காணப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு மாநகர் பகுதிகளை பசுமையாக்க ரிசர்வ் சைட்டுகளில் அடர் வனம் அமைக்க மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில்,

‘‘மாநகராட்சி நிர்வாகம் சார்பாக முதல் கட்டமாக மாநகர் பகுதிகளில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான 100 ரிசர்வ் சைட்டுகளில் அடர்வனம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், சமூக ஆர்வலர்களிடம் இருந்து அதற்கான ஸ்பான்சார் பெறவும் திட்டமிடப்பட்டுள்ளது,’’ என்றார்.

மேலும் படிக்க