• Download mobile app
10 May 2025, SaturdayEdition - 3377
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மொத்தத்தில் கோவை திமுக அரசால் புறக்கணிக்கப்படுவதாக சந்தேகம் எழுந்துள்ளது – எஸ்.பி.வேலுமணி

July 29, 2021 தண்டோரா குழு

கோவை மாவட்டம் திமுக அரசால் புறக்கணிக்கப்படுகிறது கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த பின்பு முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணி பேட்டியளித்துள்ளார்.

கோவை மாவட்ட ஆட்சியர் சமீரனை சந்தித்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கோவை தெற்கு வடக்கு,அவிநாசி, சிங்காநல்லூர் பெரியநாயக்கன்பாளையம், பொள்ளாச்சி உட்பட அனைத்து 10 எம்.எல்.ஏ.க்களும் சேர்ந்து மற்றும் ஊராட்சி பொறுப்பில் உள்ள அதிகாரிகள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து வந்து மனு அளித்தனர். அதற்குப் பிறகு எஸ்.பி. வேலுமணி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது-

கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற உறுப்பினர்கள் வளர்ச்சிப்பணி, கொரோனா தடுப்பு பணிகள் ஆகியவை பேரூராட்சி, ஊராட்சியில் கூடுதலாக வழங்கப்பட வேண்டும். வழங்குவதில் தொடர்ந்து முறைகேடுகள் நடைபெற்று வருகிறது. மேட்டுப்பாளையத்தில் என்.எம்.ஜி.ஆர் பணிகளுக்கு பூமி பூஜை செய்ததை திமுக அரசு காழ் புணர்ச்சியோடு நிறுத்தி உள்ளது. பல்வேறு நேரங்களில் அதிமுக பிரதிநிதிகள் புறக்கணிக்கப்படுகின்றன.

அரசு நிகழ்ச்சிகளிலும் அதிமுக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் ஊராட்சி, பேரூராட்சி, பஞ்சாயத்தில், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அழைக்கப்படுவதில்லை. திட்டமிட்டு புறக்கணிக்கப்படுகிறார்கள். திமுகவில் வெற்றி பெறாத கட்சி பொறுப்பில் இருக்கக்கூடிய ஒரு சிலர் சிலர் அரசு விழாக்களில் கலந்து கொண்டு பூமி பூஜையில் கலந்துகொண்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் போல செயல்படுகிறார்கள் இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருக்கும்போது கோவையில் பல்வேறு விதமான பாலங்கள் உட்பட வேலைகளுக்கு டெண்டர் கோரப்பட்டு நடைபெற்று வந்தது.இப்பொழுது அந்த வேலையைப் பாதியிலேயே நிறுத்தப்பட்டு இருப்பதாக அறிகிறோம்.

ஆங்காங்கே மழை பெய்யும் பொழுது அதனால் ஏற்பட்ட குழிகளில் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு இரு சக்கர வாகனத்தில் செல்லக்கூடியவர்கள் விழுந்து செல்லக்கூடிய நிலை ஏற்படுகிறது. அனைத்து சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் குடிநீர் திட்டம் குடிநீர் குழாய் அதிமுக ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்டு இப்பொழுது பாதியிலேயே நிறுத்தப்பட்டு இருப்பதால் அடிக்கடி விபத்துக்கு நடைபெறுகிறது. மழை காரணமாக கோவையில் நீர்நிலைகளை சேமிப்பதற்காக பல்வேறு விதமான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு குளங்கள் ஏரிகள் அகலப்படுத்தப்பட்டு இருந்தது. அதனால் இப்பொழுது மழைக்காலம் என்பதால் நீரை சேமிப்பதற்கு உடனடியாக திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நான் அமைச்சராக இருக்கும் பொழுது கோவை மாவட்டத்தில் தொடர்ந்து ஒவ்வொரு துறையைச் சேர்ந்த ஆய்வு பணிகளை மேற்கொண்டு அதிகாரிகளுக்கு திட்டங்கள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டு வந்தது. கோவையில் ஆய்வு பணிகளை ஆய்வு கூட்டம் நடைபெறுவது கிடையாது. அதனால் தொடர்ந்து ஆய்வு பணிகளை மேற்கொண்டு கோயம்புத்தூரில் திட்டங்கள் நிறைவேற்ற வேண்டும். மொத்தத்தில் கோயம்புத்தூர் திமுக அரசால் புறக்கணிக்கப்படுவதாக சந்தேகம் எழுந்துள்ளது.

வாக்களித்த மக்கள் அனைவரும் இவ்வாறாகவே யோசிக்கின்றனர். தடுப்பூசி குறித்த கேள்விக்கு, உங்கள் ஆட்சியில் போலவே மத்திய அரசிடம் தடுப்பூசி பெற்று திமுகவும் அரசு வழங்கக்கூடிய தடுப்பூசியை மக்களுக்கு சரிசமமாகப் பிரித்துக் கொடுத்து கொண்டுள்ளன. அப்படி இருக்கும்போது எப்படி தடுப்பூசி குறித்து நீங்கள் குறை சொல்ல முடியும் என்ற கேள்விக்கு, அவர் கூறும்போது : – தடுப்பூசிகள் அந்தந்த பகுதிகளுக்கு பிரித்துக் கொடுக்கும் பொழுது அதை செயல்படுத்தக் கூடிய அதிகாரிகள் அதில் முறைகேடுகள் செய்து அதை தனியாருக்கு விற்பனை செய்யக் கூடிய சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. அதையும் திமுக தடுக்க வேண்டும் என கூறினார்.

இந்த மனு கொடுக்கும் போது எம்.எல்.ஏ.க்கள் அம்மன் கே.கே. அர்ஜுனன், கே.ஆர் ஜெயராமன், பொள்ளாச்சி ஜெயராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க