• Download mobile app
10 May 2025, SaturdayEdition - 3377
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை மாநகர பகுதிகளில் பஸ், லாரி ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் 30 கிமீ வேகத்தில் தான் இயக்க வேண்டும்

July 27, 2021 தண்டோரா குழு

கோவை மாநகர பகுதிகளில் பஸ் லாரி ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் 30 கிலோ மீட்டர் வேகத்தில் தான் இயக்க வேண்டும் போக்குவரத்து துணை ஆணையர் செந்தில்குமார் கூறியுள்ளார்.

கோவை உப்பிலிபாளையம் பகுதியிலுள்ள மாநகர காவல் சமுதாயக் கூடத்தில் பஸ் மற்றும் லாரி உரிமையாளர்கள் ஆட்டோ உரிமையாளர்களுடன் போக்குவரத்து துணை ஆணையர் செந்தில்குமார் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆலோசனை கூட்டத்தில்
போக்குவரத்து துணை ஆணையர்
செந்தில்குமார் பேசும்போது,

30 கிலோ மீட்டர் வேகத்தில் பஸ் லாரி மற்றும் ஆட்டோக்கள் இயக்கவேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் காந்திபுரம் கணபதி 100 அடி ரோடு கிராஸ் கட் ரோடு சுக்ரவார் பேட்டை செல்வபுரம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் வாகன ஓட்டிகள் சுயகட்டுப்பாடு வாகனங்களை இயக்க வேண்டும். 30 கிலோ மீட்டர் வேகத்தில் வாகனங்கள் இயக்கப்பட்டால் சாலை விபத்துகள் மிகவும் குறைந்து விடும்.

மேலும் வாகனங்கள் அதிக வேகம் கொண்டு இயக்கினால் வாகன ஓட்டிகள் மற்றும் வாகன உரிமையாளர்கள் நடவடிக்கை எடுக்கப்படும் என செந்தில்குமார் எச்சரித்தார்.

மேலும் படிக்க