• Download mobile app
05 Jun 2026, FridayEdition - 3768
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மாநகராட்சியின் அறிவுரைப்படியே கணக்கெடுக்கும் பணி நடைபெறுகிறது மாநகராட்சி கமிஷனர் தகவல்

July 27, 2021 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி பகுதியில் மாநகராட்சி பணியாளர்கள் எனக்கூறி தொழில்முனைவோர்களிடம் ஜி.எஸ்.டி விவரம் சேகரிப்பட்டது.இதற்கு தொழில்முனைவோர்கள், அவர்கள் உன்மையில் மாநகராட்சி பணியாளர்களா? என மாநகராட்சி நிர்வாகம் தெளிவுப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதுகுறித்து கோவை மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் சுன்கரா கூறியிருப்பதாவது:

கோவை மாநகராட்சியில் தற்காலிக முன்களப்பணியாளர்கள் மூலமாக மாநகராட்சி பகுதிகளில் உள்ள தொழில் நிறுவனங்கள் மற்றும் கடைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.மாநகராட்சி கேட்பு பதிவேட்டில் இல்லாத நிறுவனங்களை புதிதாக சேர்க்கவும்,பட்டியலில் உள்ள காலிசெய்யப்பட்ட கடைகள் மற்றும் நிறுவனங்களை நீக்கம் செய்து புதிய கேட்பு பதிவேடு உருவாக்கவும் இப்பணி நடைபெற்று வருகிறது.

இதில் தொழில்முனைவோர்கள் ஜி.எஸ்.டி எண் கட்டாயம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. மற்ற விவரங்கள் கட்டாயம் கொடுக்கப்பட வேண்டும்.மேலும் மாநகராட்சியின் அறிவுரைப்படியே தற்காலிக முன்களப்பணியாளர்கள் கணக்கெடுக்கும் பணி செய்கின்றனர்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் படிக்க