• Download mobile app
10 May 2025, SaturdayEdition - 3377
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தந்தை கோபத்தில் அடித்ததில் மகன் பலி பேரூரில் பரபரப்பு !

July 27, 2021 தண்டோரா குழு

கோவை பேரூர் அருகே பேரூர்-செட்டிபாளையம் சாலையில் பாக்கியநாதன் (62) என்பவர் ஓட்டல் நடத்தி வருகிறார். இந்த ஒட்டலை இரண்டு வருடமாக அவர் நடத்தி வருகிறார்.

இதனிடையே கடந்த நான்கு மாதங்களாக ஒட்டலுக்கு உண்டான வாடகை கொடுக்க முடியாததால் அந்த இடத்தின் உரிமையாளர் பாக்கியநாதனை கடையை காலி செய்யுமாறு கூறியுள்ளார்.இதனை அடுத்து கடையை காலி செய்வதற்காக பொருட்களை எடுக்கும் பணி நடைபெற்றது. அப்போது மதுபோதையில் இருந்த பாக்கியநாதனின் மகன் சபரிநாதன் (33) கடையை காலி செய்ய வேண்டாம் என கூறி பாக்கியநாதனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது சபரிநாதன் அவரது தந்தை பாக்கியநாதனை கையால் அடித்து கீழே தள்ளி விட்டுள்ளார்.அதில் அவருக்கு காயம் ஏற்பட்டதை அடுத்து பாக்கியநாதன் கோபத்தில் வீட்டில் இருந்த இரும்புசுத்தி மற்றும் மூங்கில் கம்பால் சபரிநாதனை அடித்துள்ளார்.அதில் சபரிநாதனுக்கு தலையில் பலத்த அடிபட்டு சம்பவ இடத்தில் இறந்து விடுகிறார்.

இதனைத்தொடர்ந்து பாக்கியநாதன் பேரூர் காவல் நிலையத்தில் ஆஜராகி பேரூர் காவல் நிலையத்தில் நடந்தவற்றை கூறுகிறார்.இதனை அடுத்து உதவி ஆய்வாளர் பொன்ராஜ் சம்பவ இடத்துக்கு சென்று சபரிநாதனின் பிரேதத்தை கைப்பற்றி, பாக்கியநாதனை கைது செய்தார். மேலும் இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க