• Download mobile app
10 May 2025, SaturdayEdition - 3377
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் கைக்குழந்தையுடன் பெண் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம்

July 27, 2021 தண்டோரா குழு

கோவை கரும்புக்கடை பகுதியை சேர்ந்தவர்கள் சுமையா பானு மற்றும் முகமது முஸ்தபா தம்பதியினர்.இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன.ஒரு குழந்தைக்கு ஒன்றரை வயது மற்றொரு குழந்தைக்கு 40 நாட்களும் ஆகி உள்ளது. இந்த நிலையில் முகமது முஸ்தபா மற்றும் அவருடைய தாயார் சபியா மற்றும் தங்கைகள் சபானா ஆகியோர் சுமையா பானுவிடம் வரதட்சணை கேட்டு கொடுமை செய்துள்ளனர்.

இருந்தபோதும் சுமையா பானு அமைதியாக பொறுமை காத்து வந்தார். இந்த நிலையில் பிறந்த குழந்தையுடன் இருந்த சுமையா பானுவிடம் தொடர்ந்து முகமது முஸ்தபா மற்றும் அவரது குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு தொந்தரவு செய்து அடித்துள்ளனர்.இதனால் சுமையான கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சமூக நலத் துறை அதிகாரிகளிடம் புகார் அளிப்பதற்காக இன்று காலை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தார்.

அப்போது இரண்டு மணி நேரம் கழித்து மனுவை பெற்றுக் கொள்வதாக சமூகநலத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.3 மணி நேரம் ஆகியும் சமூகநலத்துறை அதிகாரிகள் மனுவை பெற்றுக் கொள்ளாததால் மனமுடைந்த சுமையா பானு மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவுவாயில் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார் அதனைத் தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் அவர்களிடம் சமரசம் பேசி போராட்டத்தை கைவிட வலியுறுத்தும் சமூக நலத் துறை அதிகாரியை சந்தித்து அவருடைய மனுவை அளித்தார்.

மேலும் படிக்க