• Download mobile app
10 May 2025, SaturdayEdition - 3377
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தேசிய மக்கள் உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சிலின் போக்குவரத்து அணியினர் ஆர்ப்பாட்டம்

July 27, 2021 தண்டோரா குழு

தேசிய மக்கள் உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சில் போக்குவரத்து அணி சார்பாக அனைத்து வகை சுற்றுலா வாகனங்களுக்கான சாலை வரியை ஒரு வருட காலத்துக்கு ரத்து செய்வது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட சுற்றுலா வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்களின் பல்வேறு கோரிக்கைகள வலியுறுத்தி, தேசிய மக்கள் உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சிலின் போக்குவரத்து அணியினர் சுமார் 50க்கும் மேற்ப்பட்டோர் கோவை செஞ்சிலுவை சங்கம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

போக்குவரத்து அணியின் தேசிய தலைவர் ஆறுமுகம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கொரோனா காலத்தில் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் வாகன உரிமையாளர்களில் சுற்றுலா வாகனங்களுக்கு 1 வருட கால சாலை வரியை ரத்து செய்ய வேண்டும். சுற்றுலா வாகனங்களுக்கு உண்டான வாகன கட்டணங்களை அரசே நிர்ணயம் செய்ய வேண்டும்.

கொரோனா காலத்தில் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் ஓட்டுனர்களுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும். தனியார் நிறுவனங்கள் கோவிட் காலத்தில் வாகன கடனுக்கான வட்டியை ரத்து செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தியும், பெட்ரோல் டீசல் விலை உயர்வு, வாகன கடனை வசூல் செய்ய தனியார் நிறுவனங்கள் அடியாட்களை கொண்டு மிரட்டுவதை கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தி பதாகைகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பினர்.இதில் பெண்கள் உட்பட 50க்கும் மேற்ப்பட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க