• Download mobile app
10 May 2025, SaturdayEdition - 3377
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மாநகராட்சி பணியாளர்கள் என கூறி ஜிஎஸ்டி விவரங்கள் சேகரிப்பு தொழில் முனைவோர்கள் அச்சம்

July 26, 2021 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி பணியாளர்கள் என கூறி தொழில் முனைவோர்களிடம் ஜிஎஸ்டி விவரங்கள் சேகரிக்கப்படுவது குறித்து மாநகராட்சி கமிஷனர் ராஜ கோபால் சுன்கரா அறிக்கை வெளியிட வேண்டும் என தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்கம் (டாக்ட்) கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து டாக்ட் சங்க மாவட்ட தலைவர் ஜேம்ஸ் கூறியிருப்பதாவது:

கோவை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் தொழிற்கூடங்களில் மாநகராட்சி பணியாளர்கள் என கூறி, தொழில் முனைவோர்களிடம் ஜிஎஸ்டி எண் மற்றும் தொழில் விவரங்களை சிலர் சேகரித்து வருகின்றனர்.எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் இவர்கள் வருகின்றனர்.

திடீரென எவ்வித முன்னறிவிப்பு முகாந்திரம் இல்லாமல் வந்து ஜிஎஸ்டி உள்ளிட்ட விவரங்களை கேட்பதால் தொழில் முனைவோர்களிடம் ஒருவித அச்ச உணர்வு ஏற்பட்டு வருகிறது.மாநகராட்சி கமிஷனரின் வழிகாட்டுதலின்படி இப்பணியாளர்கள் வருகின்றனரா?, உண்மையில் அவர்கள் மாநகராட்சி பணியாளர்களா? என்பன போன்ற கேள்விகள் தொழில் முனைவோர் மத்தியில் எழுந்துள்ளன.

எனவே கமிஷனர் உத்தரவின்பேரில் இந்த விவரங்கள் சேகரிப்பு நடைபெறுகிறதா? என்பது குறித்து அறிக்கை வெளியிட வேண்டும்.
மேலும் விவரங்கள் சேகரிப்பதாக இருந்தால் தொழில் அமைப்புகளின் கருத்துகளை அறிந்து, அதற்கு பிறகு சேகரித்தால் தொழில் முனைவோர் மத்தியில் அச்சம் இருக்காது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் படிக்க