• Download mobile app
10 May 2025, SaturdayEdition - 3377
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை மாநகராட்சி பகுதிகளில் கொசு ஒழிப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் – மாநகராட்சி கமிஷனர் உத்தரவு

July 24, 2021 தண்டோரா குழு

கோவை சொரிபாளையம், உப்பிலிபாளையம் ஆகிய பகுதிகளில் நேரில் ஆய்வு மேற்கொண்ட மாநகராட்சி கமிஷனர் ராஜ கோபால் சுன்கார கொசு ஒழிப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.

கோவை சௌரிபாளையம் சுகாதார ஆய்வாளர் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்ட மாநகராட்சி கமிஷனர்தூய்மைப்பணியாளர்கள் குப்பைகளை சேகரிக்கும் போது மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து சேகரிக்க வேண்டும் எனவும் மழைநீர் வடிகால் கால்வாய்களில் அடைக்கப்பட்டுள்ள குப்பைகளை அகற்றி நீர் தேங்காமல் செல்லும் வகையில் கால்வாயினை சுத்தப்படுத்திட வேண்டும் என தெரிவித்தார்.

இதைதொடர்ந்து,உப்பிலிபாளையம் சுகாதார ஆய்வாளர் அலுவலக வளாகத்தில் கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ளும்
முன்களப்பணியாளர்களிடம் பொதுமக்களிடம் கொசுவினால் ஏற்படும் நோய்களை குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வினை ஏற்படுத்திட வேண்டும் எனவும், வீடுகளில் தேவையற்ற உடைந்த பிளாஸ்டிக் பொருட்கள், டயர், தேங்காய் சிரட்டைகள்,உடைந்த குடங்கள், உபயோகமற்ற பொருட்கள், உடைந்த சிமென்ட் தொட்டிகள் முதலியவற்றை அப்புறப்படுத்தவும், முக்கியமாக கழிப்பறைகளை சுத்தமாக வைத்துக்கொள்ள பொதுமக்களிடம் முன்களபணியாளர்கள் தெரிவிக்க வேண்டும். மேலும்,கொசு ஒழிப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என மாநகராட்சி கமிஷனர் உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின்போது, கிழக்கு மண்டல உதவி கமிஷனர் ரங்கராஜன், ககாதார
ஆய்வாளர் ராஜேந்திரன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் படிக்க