• Download mobile app
10 May 2025, SaturdayEdition - 3377
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை ஸ்ரீநாகசாயி மந்திர் ஆலயத்தில் குரு பூர்ணிமா திருவிழா !

July 24, 2021 தண்டோரா குழு

கோவை சாய்பாபாகோவில் பகுதியில் உள்ள ஸ்ரீநாகசாயி மந்திர் ஆலயத்தில் குரு பூர்ணிமா திருவிழா கொரோனா கால விதிமுறைகளை பின்பற்றி நடைபெற்றது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ சாய்பாபா திருக்கோவிலில் நாகசாயி அறக்கட்டளை சார்பாக குரு பூர்ணிமா திருவிழா ஒவ்வொரு ஆண்டும் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டு கொரோனா கால விதிமுறைகளை பின்பற்றி குருபூர்ணிமா விழா நடைபெற்றது.

காலை காகட ஆர்த்தி, அபிஷேகம், ஹோமங்கள் நடைபெற்று, பூர்ணாஹுதி,மற்றும் நாகசாய் பஜனுடன் மத்தியான ஆரத்தியுடன் பாபாவிற்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.விழா குறித்து நாகசாயி அறக்கட்டளை நிர்வாகிகள் பாலசுப்பிரமணியன்,விஸ்வநாத் மற்றும் பாலசுப்ரமணியன் ஆகியோர் கூறுகையில் கொரோனா கால விதிமுறைகளை பின்பற்றி பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருவதாகவும்,மகா அன்னதானம் இல்லாமல் பக்தர்களுக்கு பிரசாதம் மட்டுமே இந்த ஆண்டு வழங்கப்படுவதாக தெரிவித்தனர்.

குரு பூர்ணிமா விழாவில் கலந்து கோவை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த சாய்பாபா பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க