• Download mobile app
10 May 2025, SaturdayEdition - 3377
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தென்மேற்கு பருவமழை தீவிரம்: நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு

July 23, 2021 தண்டோரா குழு

தென்மேற்கு பருவமழை மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தீவிரமாக பெய்து வருகிறது. இதனால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த 3 நாட்களாக தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது.இதனால் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்து கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.கனமழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையில் பல இடங்களில் புது அருவிகள் உருவாகியுள்ளன. இதனால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் சித்திரைச்சாவடி தடுப்பணை நிரம்பி வழிந்தது. அதே போல் மழை காரணமாக புதுக்குளம், நரசம்பதி, கோளராம்பதி, பேரூர் சொட்டையாண்டி குளம், குனியமுத்தூர் செங்குளம், கங்க நாராயண சமுத்திர குளம் உள்ளிட்ட குளங்களுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

கோவை மாவட்டத்தில் இன்று காலை 8 மணி நிலவரப்படி 24 மணி நேரத்தில் 535.10 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. அதன்படி சின்கோனா 102, சின்னக்கல்லார் 115, வால்பாறை 93, சோலையார் 102, ஆழியார் 4.6, பொள்ளாச்சி 11, மேட்டுப்பாளையம் 16, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் ,0.5 என்று மொத்தமாக 535.10 மில்லி மீட்டர் மழை பெய்தது. இதன் சராசரி 38.2 மில்லி மீட்டராகும்.

மேலும் படிக்க