• Download mobile app
18 May 2025, SundayEdition - 3385
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

திருச்சி சாலையில் மரம் விழுந்ததின் காரணமாக ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

July 23, 2021 தண்டோரா குழு

கோவையில் கடந்த சில தினங்களாக பலத்த காற்று வீசுவதுடன் லேசான மழை பெய்து வருகிறது.இன்று லேசான மழை பெய்த நிலையில் திருச்சி சாலை அரசு மருத்துவமனை அடுத்து உள்ள தர்கா எதிரே உள்ள மரம் வேறோடு சாய்ந்ததால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

வேறோடு சாய்ந்து விழுந்த மரத்தின் கீழ் கார் ஒன்று நிறுத்தி வைக்கபட்டு இருந்த நிலையில்
அதிர்ஷடவசமாக யாரும் இல்லாத காரணத்தால் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.மரம் சாய்ந்து விழுந்தது குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கபட்டதை தொடர்ந்து அவசர மீட்பு ஊர்தியில் வந்த 6 பேர் கொண்ட தீயணைப்பு வீரர்கள் ரம்பம் கொண்டு அரை மணி நேரத்தில் கிளைகளை வெட்டி அப்புறபடுத்தினர்.

மரம் விழுந்ததின் காரணமாக சிறுதி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து போக்குவரத்து காவலர்கள் வாகனங்களை மாற்று பாதையில் அனுப்பி வைத்தனர்.

மேலும் படிக்க