• Download mobile app
10 May 2025, SaturdayEdition - 3377
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை வழித்தடத்தில் கொச்சுவேலி – யஸ்வந்த்பூர் சிறப்பு ரயில் இயக்கம்

July 21, 2021 தண்டோரா குழு

கேரள மாநிலம், கொச்சுவேலியில் இருந்து கர்நாடகம் மாநிலம், யஸ்வந்த்பூருக்கு கோவை வழித்தடத்தில் சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சேலம் ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

யஷ்வந்த்பூரில் இருந்து ஜூலை 22 ஆம் தேதி முதல் வியாழக்கிழமைகளில் மாலை 3.20 க்கு புறப்படும் சிறப்பு ரயிலானது, மறுநாள் காலை 6.50 மணிக்கு கொச்சுவேலி நிலையத்தை சென்றடையும். இதேபோல், கொச்சுவேலியில் இருந்து ஜூலை 23 ஆம் தேதி வெள்ளிக்கிழமைகளில் நண்பகல் 12.50 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை 4.30 மணிக்கு யஷ்வந்த்பூரைச் சென்றடையும்.

இந்த ரயில்கள் கிருஷ்ணராஜபுரம், சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு, திருச்சூர், எர்ணாகுளம் டவுன், கோட்டயம், செங்கனூர், கொல்லம் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க