July 21, 2021
தண்டோரா குழு
இஸ்லாமிய மக்களின் பண்டிகையான பக்ரீத் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. ஈகைத்திரு நாள் என்று அழைக்கப்படும் இந்த பண்டிகையின் ஒரு பகுதியாக கோவை ஒப்பணக்கார வீதியில் அத்தார் ஜமாத் பள்ளி வாசலில் இஸ்லாமிய மக்கள் புத்தாடை அணிந்து சிறப்பு தொழுகை நடத்தினர்.
கொரோனா ஊரடங்கால் நீண்ட நாட்களுக்கு பிறகு ஜமாத்தில் கொண்டாடப்படும் பண்டிகை என்பதால் இஸ்லாமிய மக்கள் உற்சாகத்துடன், முகக்கவசம் அணிந்து தொழுகையில் கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து குர்பானி எனப்படும் நிகழ்வு மூலம் ஆடு அல்லது மாட்டினை இறைவனுக்கு படைத்து அவற்றின் இறைச்சியை ஏழை எளியோருக்கு வழங்கப்படும் என தொழுகையில் கலந்து கொண்ட இஸ்லாமியர்கள் தெரிவித்துள்ளனர்.