July 18, 2021
தண்டோரா குழு
சிவா அறக்கட்டளை சார்பில் சிறுமுகை பகுதியில் வசிக்கும் 200 மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா நிவாரணம் வழங்கப்பட்டது.
Children of India Foundation உதவியுடன் கோவையிலிருந்து செயல்பட்டு வரும்
சிவா அறக்கட்டளை சார்பில் இன்று மேட்டுப்பாளையம் மற்றும் சிறுமுகை பகுதியிலுள்ள 200 மாற்றுத் திறனாளிகளுக்கு கொரோனா நிவாரணமாக ரூபாய் 1000 பெறுமானமுள்ள அத்தியாவசிய மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது. மேலும், s.m. நகரைச் சார்ந்த காளீஸ்வரன் என்ற மாற்றுத்திறனாளிக்கு வீல்சேர் ஒன்று வழங்கப்பட்டது.
இன்று நிகழ்ச்சியில்,சிவா அறக்கட்டளை பொறுப்பாளர் சுப்பிரமணிய சிவா, பணியாளர்கள் வெங்கடசுப்ரமணியன், தீபா, தன்னார்வலர்கள் காரமடை சித்ரா, கல்பனா, நித்யா, விஜயகுமார்,மேட்டுப்பாளையம் ஊர்க்காவல் படை தளபதி சு.ராமகிருஷ்ணன், உதவி படைப்பிரிவு தளபதி ஆ.கணேசன், மற்றும் படை ஜவான்கள் தே.குமார்
செ.பிரபு சுரேஷ்,இணைந்தக்கரங்கள்
மாற்றுத்திறனாளிகள் நல்வாழ்வு சங்கத்தினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.