• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வரிகள் வசூலிப்பு சலுகை திட்டம் நீடிப்பு – தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம் வரவேற்பு

July 16, 2021 தண்டோரா குழு

தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம் (சைமா) தலைவர் அஸ்வின் சந்திரன் அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இந்திய ஜவுளி தொழில் பன்னாட்டு சந்தையில் போட்டியிட ஒரு சமதளம் உருவாக்கும் முயற்சியில் மத்திய அரசு முனைப்புடன் ஈடுபட்டு பல்வேறு முற்போக்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் மத்திய மற்றும் மாநில வரிகள் மற்றும் வசூலிப்பு சலுகை திட்டத்தின் கீழ் இறக்குமதி வரி, சரக்கு மற்றும் சேவை வரிகளை தவிர, இதர மறைமுக வரிகளை திருப்பி கொடுப்பதன் மூலம், இந்திய ஆயத்த ஆடை மற்றும் வீட்டு உபயோக ஜவுளி ஏற்றுமதியாளர்கள் வரி ஏற்றுமதியை தவிர்த்து, சந்தை போட்டி திறனை அதிகரிக்க வழிவகை செய்கிறது.

ஏற்றுமதி ஜவுளி பொருட்கள் மீதான மாநில மற்றும் மறைமுக உள்ளீட்டு வரிகளை திருப்பி கொடுக்கும் வகையில், 2016-ம் ஆண்டில் இந்த திட்டத்தை முதன்முறையாக அரசு அறிவித்தது. மார்ச் 2019-ல் இச்சலுகைகளை உயர்த்தி அறிவித்ததன் மூலம் இந்திய ஆயத்த ஆடை மற்றும் வீட்டு உபயோக ஜவுளி பொருட்களின் ஏற்றுமதி ஸ்திரதன்மை அதிகரித்தது. நடப்பாண்டு ஜனவரி முதல் தேதியில் (RoDETP) ஆர்.ஒ.டி.இ.டி.பி என்ற புதிய திட்டம் அறிவிக்கப்பட்டதால், இத்திட்டமானது நிறுத்தி வைக்கப்பட்டது.

கொரோனா தொற்றால் தொய்வடைந்துள்ள ஜவுளி தொழிலை ஊக்குவிக்கும் வகையிலும், பன்னாட்டு சந்தையில் உருவாகும் புதிய வாய்ப்புகளை நமது தொழில் துறையினர் பெறும் வகையிலும் மீண்டும் இத்திட்டம் தொடர வேண்டும் என்று ஏற்றுமதியாளர்கள் தரப்பில் மத்திய அரசுக்கு கோரிக்கை முன் வைக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் தற்போது ஆயத்த ஆடை மற்றும் வீட்டு உபயோக ஜவுளிக்கான இத்திட்டத்தை 2024-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதி வரை நீட்டித்துள்ளது.இதற்காக பிரதமர், மத்திய நிதியமைச்சர், ஜவுளித் துறை அமைச்சர் மற்றும் முன்னாள் ஜவுளித் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி ஆகியோருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம்.

கொரோனா தொற்று தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஜவுளி தொழிலுக்கு இது ஒரு ஊக்க மருந்தாக அமைந்துள்ளது. இதனால் வரும் மூன்று ஆண்டுகளுக்கு ஆயத்த ஆடை மற்றும் வீட்டு உபயோக ஜவுளிகளின் ஏற்றுமதி கணிசமாக உயர வாய்ப்புள்ளது. பல லட்சக்கணக்கான புதிய வேலை வாய்ப்புகளும், நாட்டின் அந்நிய செலவாணியும் உயரும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க