• Download mobile app
29 Mar 2026, SundayEdition - 3700
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலைய கட்டுமான பணிகள் – மாநகராட்சி கமிஷனர் ஆய்வு

July 14, 2021 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி தெற்கு மண்டல பகுதிகளில் தூய்மைப் பணிகள், வளர்ச்சி பணிகள் குறித்து மாநகராட்சி கமிஷனர் ராஜ கோபால் சுன்கரா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

கோவை சுண்டக்காமுத்தூர் ரோடு சேத்துமாவாய்க்கால் பகுதியில் பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை பார்வையிட்டு மாநகராட்சி கமிஷனர் ஆய்வு செய்தார். அதே போல் பாலாஜி நகர் பகுதியில் 15 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுமான பணிகளை பார்வையிட்டார்.

தொடர்ந்து ஆத்துப்பாலம் மின்மயானத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட பின்னர் வெள்ளலூரில் ரூ.168 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுவரும் புதிய பேருந்து நிலையத்தின் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டார். பின்னர் சீர்மிகு நகரத் திட்டத்தின்கீழ் உக்கடம் பெரியகுளத்தில் பேஸ்-1 பகுதியில் 3.85 கி.மீட்டர் தூரத்திற்கு குளக்கரையினை அழகுபடுத்தும் பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டார்.அப்போது இப்பணிகளை விரைந்து முடிக்குமாறு தொடர்புடைய அலுவலர்களுக்கு மாநகராட்சி கமிஷனர் உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின்போது தெற்கு மண்டல உதவி கமிஷனர் சரவணன், செயற்பொறியாளர் (ஸ்மார்ட் சிட்டி) சரவணக்குமார், செயற்பொறியாளர் (தெற்கு) சுந்தரர்ராஜ் உதவி பொறியாளர் கனகராஜ், மண்டல சுகாதார அலுவலர் லோகநாதன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

மேலும் படிக்க