• Download mobile app
12 Nov 2025, WednesdayEdition - 3563
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் பெண் யானைக்கு ஆந்த்ராக்ஸ் நோய் – கால்நடைகளுக்கு தடுப்பூசி போட அறிவுறுத்தல்

July 13, 2021 தண்டோரா குழு

இறந்த பெண் யானைக்கு ஆந்த்ராக்ஸ் நோய் எதிரொலி,கால்நடைகளுக்கு தடுப்பூசி போட வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.

கோவை வன சரகத்திற்கு உட்பட்ட ஆனைக்கட்டி பகுதியில் 15 வயது பெண் யானை இறந்து கிடப்பது கண்டறிந்து, அங்கு கால்நடை மருத்துவர்கள் உடன் சென்ற வனத்துறையினர், யானை உயிர் இறப்புக்கான காரணம் குறித்து ஆய்வு செய்ததில்,யானையின் உடற்பகுதி மற்றும் வாயிலிருந்து ரத்தம் வழிந்திருப்பது தெரியவந்தது.

யானைக்கு ஆந்தராக்ஸ் நோய் பாதிக்கப்பட்டு, உயிரிழந்தால் மட்டுமே இதுபோன்ற நிலை ஏற்படும் என்று அறிந்த வனத்துறையினர் யானையின் ரத்த மாதிரிகளை சேகரித்ததோடு, யானைக்கு பிரேத பரிசோதனை மேற்கொண்டால் வனப்பகுதியில் ஆந்திராக்ஸ் நோய் பரவ வாய்ப்புள்ளதால், யானையை எரியூட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் ஆனைகட்டி சுற்றுவட்டாரப் பகுதியிலுள்ள கால்நடைகளுக்கு தடுப்பூசி போட,கால்நடை துறைக்கு வனத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்க