• Download mobile app
05 Jun 2026, FridayEdition - 3768
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பழைய டயர், தூக்கி வீசிபட்ட பொருட்களில் தண்ணீர் சேராத வண்ணம் பார்க்க வேண்டும் – மாநகராட்சி கமிஷனர் வேண்டுகோள்

July 12, 2021 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டல பகுதிகளில் கொரோனா தடுப்பு பணிகள், தூய்மை பணிகள் மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்து மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் சுன்கரா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

கோவை பீளமேடு அருகே பயனியர் மில் சாலை நகர்ப்புற ஆரம்ப சுகாதார அலுவலக வளாகத்தில் மாநகராட்சி கமிஷனர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் முன்களப்பணியாளர்களிடம் அவர் தெரிவிக்கையில், வீடு வீடாகச் சென்று சளி, காய்ச்சல், இருமல் போன்ற பரிசோதனை செய்து சேகரிக்கப்பட்ட பரிசோதனையின் விபரங்களை பதிவேடுகளில் பதிவு செய்திட வேண்டும்.

களப்பணி மேற்கொள்ளும்போது முகக்கவசம் அணிந்தும், கிருமிநாசினி கொண்டு கைகளை அடிக்கடி சுத்தப்படுத்திட வேண்டும்.அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும், என தெரிவித்தார். பின்னர் கொசுவினால் ஏற்படும் நோய்களை தவிர்க்க, கொசுக்களை ஒழிக்க பழைய டயர், தூக்கி வீசியெரியப்பட்ட பொருட்கள், பிளாஸ்டிக் கேன்களில் போன்றவற்றில் தண்ணீர் சேராத வண்ணம் பார்க்க வேண்டும். தேவையற்ற அதுபோன்ற பொருட்களை அகற்றிட வேண்டும்.

வீட்டில் உபயோகப்படுத்தாத கழிவறைகளில் கொசு உற்பத்தி செய்ய வாய்ப்புண்டு. அம்மாதிரியான கழிப்பிடங்களை சுத்தம் செய்த பின்னர், மூடி வைக்க வேண்டும் என முன்களப்பணியாளர்கள் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்தார். தொடர்ந்து பொன்னி நகர் பகுதியில் தார் சாலை அமைக்கும் பணிகளை பார்வையிட்டு, அதன் தரத்தினை குறித்து அவர் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின் போது வடக்கு மண்டல உதவி கமிஷனர் மோகனசுந்தரி, செயற்பொறியாளர் பார்வதி, உதவி செயற்பொறியாளர் செந்தில் பாஸ்கர், மண்டல சுகாதார அலுவலர் ராமச்சந்திரன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் படிக்க