• Download mobile app
11 May 2025, SundayEdition - 3378
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

எச்டிஎப்சி பிளக்ஸி கேப் நிதியின் 26வது ஆண்டு கொண்டாட்டம்

July 7, 2021 தண்டோரா குழு

எச்டிஎப்சி பரஸ்பர நிதியின் முதலீட்டு மேலாளராக செயல்படும் எச்டிஎப்சி சொத்து மேலாண்மை கம்பெனி லிமிடெட், இந்தியாவின் முன்னணி மீச்சுவல் பண்ட் நிறுவனங்களில் ஒன்றாக, கடந்த மே 31 வரையில் 4.11 லட்சம் கோடி ருபாய் மதிப்பீட்டினை நிர்வகித்து வருகிறது. கடந்த 26 ஆண்டுகளாக சொத்து உருவாக்கத்தில் எச்டிஎப்சி பிளக்ஸி கேப் நிதி பயணத்தில் தொடர்கிறது.

எச்டிஎப்சி பிளக்ஸி கேப் நிதியானது, பழமையானது, முதலீட்டாளர்களுக்கு கடந்த 25 ஆண்டுகளாக பல சரித்திரமிக்க பாதையை அமைத்துக் கொடுத்துள்ளது.எச்டிஎப்சி பிளக்ஸி கேப் நிதியானது, சந்தையில் சரிவுகள் ஏற்பட்டபோதும் அவற்றை வெற்றிகரமாக கடந்து வந்துள்ளது.

2000-ல் தகவல் தொழில்நுட்பம், 2007 கட்டமைப்புகள் மற்றும் ரியல் எஸ்டேட், 2015 மருந்துகள், 2018-ல் நடுத்தரமுதலீட்டு பங்குகள் போன்ற சரிவுகளை சந்தித்துள்ளது. இத்தகைய சரிவுகளை வெற்றிகரமாக கடந்து நிலையான வணிகத்தை அளித்துள்ளதோடு, மதிப்புகளையும் அதிகரித்துள்ளது.

கடந்த 26 ஆண்டுகளுக்கு முன் எச்டிஎப்சி பிளக்ஸி கேப் நிதியில் முதலீடு செய்தவர்களுக்கு மிகுந்த செல்வத்தை வழங்கியுள்ளது. 1995 ஜனவரி 1ல் துவங்கிய நாளில் ஒரு லட்ச ருபாய் முதலீடு செய்திருந்தால், கடந்த 2021 மே 31 ல் அது 87.60 லட்ச ருபாயாக வளர்ச்சி பெற்றிருக்கும். ஆண்டுக்கு 18.44 சதம் ஒட்டுமொத்த வளர்ச்சி பெற்றிருக்கும். மாதந்தோறும் 10 ஆயிரம் ருபாய் முதலீடு செய்திருந்தால் 9.57 கோடியாக உயர்ந்திருக்கும். 26 ஆண்டுகளில் சந்தை 50 சதம் வரையிலும் வீழ்ச்சி பெற்று உயர்ந்துள்ளது.

இந்த வீழ்ச்சியிலும் வலுவான மீட்சியை பெற்றது. இதன்தற்போதைய 2021 ஜூன் 21 அன்று ஒட்டுமொத்த மதிப்பு ரு.882 ஆக உள்ளது. துவக்க காலத்திலிருந்து ஆண்டுக்கு ஒட்டுமொத்த வளர்ச்சி 18 சதம் இருந்தது.

எச்டிஎப்சி சொத்து மேலாண்மை கம்பெனி லிமிடெட்டின் தலைமை முதலீட்டு அதிகாரி மற்றும் செயல் இயக்குனர் பிரசாந்த் ஜெயின் பேசுகையில்,

“எச்டிஎப்சி பிளக்ஸி கேப் நிதி, பொருளாதார வீழ்ச்சி மற்றும் நிறுவனங்களின் லாபத்தையும் சமமாக நிலை நிறுத்தி வளர்ச்சி பெற்றுள்ளது. நீண்ட காலத்திற்கான தொலைநோக்கோடு வளர்ச்சியை அடிப்படையாக கொண்டதாக உருவாக்கப்பட்டது. குறைவான முதலீட்டில், நியாயமான மதிப்பீட்டில், வலுவான பொருளீட்டலுடன் அமைந்தது.

தற்போது சந்தை விரைவான போக்கில் இருந்தாலும், நீண்ட நாள் அடிப்படையில், இன்னும் மதிப்பில் குறைவான பங்குகளை தேர்வு செய்து முதலீடு செய்து வருகிறது,” என்றார்.

மேலும் படிக்க