July 6, 2021
தண்டோரா குழு
கோவை – திருப்பதி இடையே ஜூலை 9 ஆம் தேதி முதல் சிறப்பு ரயில் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, சேலம் ரயில்வே கோட்டம் சார்பில் தெரிவித்துள்ளதாவது:
கோவை – திருப்பதி இடையே ஜூலை 9 ஆம் தேதி முதல், வாரத்தில் 4 நாள்களுக்கு அதிவிரைவு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளன. அதன்படி, கோவை ரயில் நிலையத்தில் ஜூலை 9 ஆம் தேதி முதல், செவ்வாய்க்கிழமை, வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 6 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு ரயில் அன்றைய தினம் பிற்பகல் 1.20 மணிக்கு திருப்பதியைச் சென்றடையும்.
இதேபோல், ஜூலை 10 ஆம் தேதி முதல் சனிக்கிழமை, திங்கள்கிழமை, புதன்கிழமை, வியாழக்கிழமைகளில் திருப்பதி நிலையத்தில் பிற்பகல் 2.55 மணிக்கு புறப்படும் அதிவிரைவு சிறப்பு ரயில் அன்றைய தினம் இரவு 10.45 மணிக்கு கோவை நிலையத்தை வந்தடையும். இந்த ரயிலானது, , திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, சித்தூர் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும்.
இவ்வாறு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.