July 6, 2021
தண்டோரா குழு
கம்போர்டு சர்வதேச பள்ளி சார்பில்
மணியகாரம்பாளையத்தில் குடியிருப்போருக்கு இலவச தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
உலகம் முழுவதிலும் தொடர்ந்து கோவிட் 19 தொற்று பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரசிற்கு தடுப்பு மருந்து இதுவரை ஏதும் கண்டுபிடிக்கப்படாத நிலையில் தடுப்பூசி மட்டுமே தற்போது தீர்வாக இருந்து வருகிறது. இதையடுத்து, பல்வேறு இடங்களில் தடுப்பூசி முகாம் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் சார்பில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கம்போர்டு சர்வதேச பள்ளியின் தாளாளர் பூங்கோதை அருள் ரமேஷ், இரண்டு மருத்துவமனைகளுடன் இணைந்து மணியகாரம்பாளையத்தில் குடியிருப்போருக்கு இலவச தடுப்பூசி முகாமை நடத்தினார்.
மணியகாரம்பாளையம் சமுதாயக் கூடத்தில் நடந்த இரண்டுகட்டமாக 610 பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி 2021 ஜூன் 27ம் தேதியும், 2021 ஜூலை 4ம் தேதியும் போடப்பட்டது.கம்போர்டு சர்வதேச பள்ளி குழுவும், கங்கா மருத்துவமனை மற்றும் ராமகிருஷ்ணா மருத்துவமனையும் இணைந்து மணியகாரம்பாளையம் பகுதியில் தேவையானோருக்கு மக்களுக்கு இந்த தடுப்பூசி போடும் பணியை சிறப்பாக மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.