• Download mobile app
11 May 2025, SundayEdition - 3378
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கம்போர்டு சர்வதேச பள்ளி சார்பில் இலவச தடுப்பூசி முகாம்

July 6, 2021 தண்டோரா குழு

கம்போர்டு சர்வதேச பள்ளி சார்பில்
மணியகாரம்பாளையத்தில் குடியிருப்போருக்கு இலவச தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

உலகம் முழுவதிலும் தொடர்ந்து கோவிட் 19 தொற்று பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரசிற்கு தடுப்பு மருந்து இதுவரை ஏதும் கண்டுபிடிக்கப்படாத நிலையில் தடுப்பூசி மட்டுமே தற்போது தீர்வாக இருந்து வருகிறது. இதையடுத்து, பல்வேறு இடங்களில் தடுப்பூசி முகாம் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் சார்பில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கம்போர்டு சர்வதேச பள்ளியின் தாளாளர் பூங்கோதை அருள் ரமேஷ், இரண்டு மருத்துவமனைகளுடன் இணைந்து மணியகாரம்பாளையத்தில் குடியிருப்போருக்கு இலவச தடுப்பூசி முகாமை நடத்தினார்.

மணியகாரம்பாளையம் சமுதாயக் கூடத்தில் நடந்த இரண்டுகட்டமாக 610 பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி 2021 ஜூன் 27ம் தேதியும், 2021 ஜூலை 4ம் தேதியும் போடப்பட்டது.கம்போர்டு சர்வதேச பள்ளி குழுவும், கங்கா மருத்துவமனை மற்றும் ராமகிருஷ்ணா மருத்துவமனையும் இணைந்து மணியகாரம்பாளையம் பகுதியில் தேவையானோருக்கு மக்களுக்கு இந்த தடுப்பூசி போடும் பணியை சிறப்பாக மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க