• Download mobile app
11 May 2025, SundayEdition - 3378
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் பெட்ரோல் டீசல் உயர்வை கண்டித்து தேமுதிக சார்பில் ஆர்ப்பாட்டம்

July 5, 2021 தண்டோரா குழு

பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் சிலிண்டர் விலையை கட்டுபடுத்த தவறிய மத்திய மாநில அரசை கண்டித்து கோவை மாவட்ட தேமுதிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தேமுதிக தலைவர் கேப்டன் அவர்களின் ஆணைப்படி பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு கட்டும் கட்டுமான பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வைக் கண்டித்தும் டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மத்திய மாநில அரசுகளை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கோவை மாநகர் மாவட்ட செயலாளர் காட்டனசெந்தில் கோவை தெற்கு மாவட்ட செயலாளர் பீகே தினகரன் கோவை வடக்கு மாவட்ட கழக பொறுப்பாளர் எம் சிவராமன், கோவை மாவட்ட அவைத்தலைவர் கேபிஎஸ் தங்கராஜ், மாநிலத் தேர்தல் பணிக்குழு செயலாளர் சிங்கைச் சந்துரு, மாநில மகளிர் அணி துணைச் செயலாளர் துரை, மாநில தொழிற்சங்க பேரவை துணை சட்ட ஆலோசகர் எம்.எஸ் முருகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது பெட்ரோல் டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டது. மேலும் விலைவாசி உயர்வை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டன. தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக மூட மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட தேமுதிகவினர் கலந்து கொண்டனர். நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநகர் மாவட்ட துணை செயலாளர் கோவிந்தராஜ்,
பி.ஜே.எஸ் பாபு,தலைமை செயற்குழு உறுப்பினர் ராகவலிங்கம் பொதுக்குழு உறுப்பினர் ஆர்.முத்துக்குமரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க