• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

திருநங்கைகளுக்கு அரசு குடியிருப்பு வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும் – மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை

June 28, 2021 தண்டோரா குழு

திருநங்கைகளுக்கு அரசு குடியிருப்பு வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும் என கோவை மாவட்ட திருநங்கைகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை மாவட்ட சமூகநலத் துறை மூலமாக, மூன்றாம் பாலினத்தவர்களுக்கு அனைத்து வகையான நலத்திட்ட உதவிகள் வழங்கும் வகையில், திருநங்கை, திருநம்பி என்னும் அடையாள அட்டை, மருத்துவ பரிசோதனையின் அடிப்படையில் வழங்கப்படுகிறது.

எனவே, புதிய அடையாள அட்டை மற்றும் 40 வயதுக்கு மேற்பட்ட ஆதரவற்ற மூன்றாம் பாலினத்தவர்களுக்கு ஓய்வூதியம் பெற, விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. இதில் முதற்கட்டமாக விண்ணப்பித்த 15 திருநங்கைகளுக்கு கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் அடையாள அட்டையை வழங்கினார். தொடர்ந்து இவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் தடுப்பூசி போடப்பட்டது.

இதனை தொடர்ந்து பேசிய திருநங்கைகள்,

தங்களுக்கு கோவை மாவட்டத்தில் அரசு குடியிருப்பு வசதிகள் விரைவில் ஏற்படுத்தி தர வேண்டும் எனவும்,அதே போல குடும்ப அட்டை வழங்க வேண்டும் எனவும்,கோவையில் உள்ள திருநங்கைகளுக்கு ஓய்வு ஊதியம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்க