• Download mobile app
14 May 2025, WednesdayEdition - 3381
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

விமானநிலைய விரிவாக்க பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு ஆட்சியர் அறிவுரை

June 23, 2021 தண்டோரா குழு

கோவை விமான நிலைய விரிவாக்கம் கோவை மக்களின் நீண்ட கால கணவாகும். இதற்கான நிலகையகப்படுத்தும் பணி நடந்து வருகிறது.

இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக விமானநிலைய விரிவாக்கத்திற்கு தேவையான நிலங்களை கையகப்படுத்தும் பணியில் தொய்வு நிலவியது. இதனிடையே விமானநிலைய விரிவாக்கம் குறித்த ஆலோசனை கூட்டம் கோவை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு ஆட்சியர் சமீரன் தலைமை தாங்கி கூறியதாவது:

மாவட்ட நிர்வாகத்திடம் உள்ள ரூ.26 கோடி நிதியை விரைந்து நில உரிமைதாரர்களுக்கு இந்த மாத இறுதிக்குள் வழங்கி, நிலத்தை கையகப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். விமானநிலைய விரிவாக்கத்திற்கு நிலம் வழங்க உள்ள நில உரிமையாளர்களுக்கு இழப்பீடு தொகை வழங்க அரசிடம் இருந்து ரூ.1,000 கோடி பெறுவதற்கு தேவையான நடவடிக்கைகளை விரைந்து முடிக்க வேண்டும்.

மேலும் இந்திய ராணுவத்தின் வசம் உள்ள 134 ஏக்கர் நிலத்தை விமானநிலைய ஆணையத்திற்கு மாற்ற தடையில்லா சான்று பெற வேண்டும். விமானநிலைய விரிவாக்க பணிகளை தாமதம் இன்றி விரைந்து முடிக்க அனைத்து நடவடிக்கைகளையும் அலுவலர்கள் எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரைமுருகன், விமானநிலைய இயக்குனர் மகாலிங்கம் உள்பட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க