• Download mobile app
05 Jun 2026, FridayEdition - 3768
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விமானநிலைய விரிவாக்க பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு ஆட்சியர் அறிவுரை

June 23, 2021 தண்டோரா குழு

கோவை விமான நிலைய விரிவாக்கம் கோவை மக்களின் நீண்ட கால கணவாகும். இதற்கான நிலகையகப்படுத்தும் பணி நடந்து வருகிறது.

இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக விமானநிலைய விரிவாக்கத்திற்கு தேவையான நிலங்களை கையகப்படுத்தும் பணியில் தொய்வு நிலவியது. இதனிடையே விமானநிலைய விரிவாக்கம் குறித்த ஆலோசனை கூட்டம் கோவை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு ஆட்சியர் சமீரன் தலைமை தாங்கி கூறியதாவது:

மாவட்ட நிர்வாகத்திடம் உள்ள ரூ.26 கோடி நிதியை விரைந்து நில உரிமைதாரர்களுக்கு இந்த மாத இறுதிக்குள் வழங்கி, நிலத்தை கையகப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். விமானநிலைய விரிவாக்கத்திற்கு நிலம் வழங்க உள்ள நில உரிமையாளர்களுக்கு இழப்பீடு தொகை வழங்க அரசிடம் இருந்து ரூ.1,000 கோடி பெறுவதற்கு தேவையான நடவடிக்கைகளை விரைந்து முடிக்க வேண்டும்.

மேலும் இந்திய ராணுவத்தின் வசம் உள்ள 134 ஏக்கர் நிலத்தை விமானநிலைய ஆணையத்திற்கு மாற்ற தடையில்லா சான்று பெற வேண்டும். விமானநிலைய விரிவாக்க பணிகளை தாமதம் இன்றி விரைந்து முடிக்க அனைத்து நடவடிக்கைகளையும் அலுவலர்கள் எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரைமுருகன், விமானநிலைய இயக்குனர் மகாலிங்கம் உள்பட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க