• Download mobile app
29 Mar 2026, SundayEdition - 3700
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கொரோனா சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 8 ஆயிரமாக குறைந்தது

June 18, 2021 தண்டோரா குழு

கோவையில் கொரோனா சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரமாக குறைந்துள்ளது.

இது குறித்து கோவை மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:

கோவையில் கடந்த மாதம் கொரோனா தொற்று வேகமாக பரவியது. இதனால் கொரோனா சிகிச்சையில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இருந்தனர். இவர்களில் 25 ஆயிரம் பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டனர். தற்போது கொரோனா தொற்று குறைந்து வருவதால் சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கையும் வேகமாக குறைகிறது.

தற்போது 8 ஆயிரம் பேர் மட்டுமே மாநகராட்சி பகுதியில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுகின்றனர். இதேபோல் ஊரக பகுதியில் 4 ஆயிரம் பேர் சேர்த்து மாவட்டம் முழுவதும் மொத்தம் 12 ஆயிரம் பேர் மட்டுமே தொற்றுக்கு சிகிச்சை பெறுகின்றனர். இதன் காரணமாக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் படுக்கைகள் அதிகளவு காலியாக உள்ளன.

இரண்டாவது அலை குறைந்து வருவதால் தற்போது தடுப்பூசி போடும் பணியில் கவனம் செலுத்தி வருகிறோம். குறிப்பாக அனைத்து மார்க்கெட் வியாபாரிகளும் தடுப்பூசி கட்டாயம் போட வேண்டும் என்று அறிவித்து உள்ளோம். தற்போது வரை 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வியாபாரிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது.

கொரோனா தொற்று குறைந்து வருவதால் பொதுமக்கள் முகக்கவசம் அணிவதில் அலட்சியம் காட்டக்கூடாது. அலட்சியம் காட்டினால் மூன்றாவது அலைக்கு வழிவகுத்து விடும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்.

மேலும் படிக்க