• Download mobile app
14 May 2025, WednesdayEdition - 3381
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

வீட்டிலிருந்தபடியே சர்வதேச யோகா போட்டிக்கு தயாராகும் பள்ளி மாணவன் !

June 18, 2021 தண்டோரா குழு

சர்வதேச யோகா தினம் விரைவில் வர உள்ள நிலையில் ,வீட்டிலிருந்தபடியே சர்வதேச யோகா போட்டிகளில் கலந்து கொள்ள பயிற்சிகள் செய்து தன்னை தயாராக்கி வரும் கோவையை சேர்ந்த பள்ளி மாணவர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

கோவை காந்திமாநகர் பகுதியை சேர்ந்த தம்பதியர் சௌந்தர்ராஜன், கவிதா, இவர்களது மகன் நிரஞ்சன். தற்போது பிளஸ் டூ பயின்று வரும் இவர்,தனது ஆறாம் வயது முதலே யோகா பயிற்சி மேற்கொண்டு கடந்த பனிரெண்டு ஆண்டுகளாக யோகாவில் பல்வேறு நிலைகளில் திறம்பட பயிற்சி பெற்றதோடு, தேசிய,சர்வதேச அளவுகளில் அத்லெட்டிக் யோகாவில் வெற்றி பெற்று தங்க பதக்கம் உட்பட பல்வேறு பரிசுகள் வென்று அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தவர்.

இந்நிலையில் வரும் 21 ஆம் தேதி சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு,யோகா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும்,மேலும் கொரோனா கால ஊரடங்கால் அனைத்து சேவைகளும் முடங்கி உள்ள நிலையில் சர்வதேச யோகா போட்டிகளில் கலந்து கொள்ள தன்னை தயார் படுத்தும் விதமாக காந்திமா நகரில் உள்ள தனது வீட்டிலேயே பல்வேறு விதமான யோகாசனங்களை செய்தார்.

கேரம்,ஸ்கேட்டிங் என பல்வேறு விளையாட்டுகளில் சாதித்து வரும் நிரஞ்சன் யோகாவில் டாக்டர் பட்டம் பெற்று,உலகம் முழுவதும் யோகா கலையின் பெருமைகள் குறித்து முறையாக கற்று கொடுப்பதே தமது இலட்சியம் என தெரிவித்துள்ளார். வீட்டிலேயே தன்னை தயார் படுத்தி வரும் நிரஞ்சனுக்கு அவரது பெற்றோர் மற்றும் இளைய சகோதரர் நிர்மல் ஆகியோர் ஊக்கமளித்து வருகின்றனர்.பள்ளிகள்,கல்லூரிகள் இல்லாத நேரத்திலும் தமது நேரத்தை வீணாக்கமால் வீட்டிலேயே இவர் யோகா பயிற்சி செய்து வருவது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

மேலும் படிக்க