• Download mobile app
14 May 2025, WednesdayEdition - 3381
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தமிழக அரசு கொரோனாவை தவறான முறையில் கையாண்டுள்ளது – கோவையில் வேலூர் இப்ராஹிம் பேட்டி

June 17, 2021 தண்டோரா குழு

கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதில் தமிழக அரசு மிகப்பெரிய தோல்வியை கண்டுள்ளது என்று பா.ஜ.க சிறுபான்மையினர் பிரிவின் தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பா.ஜ.க மாவட்ட தலைமை அலுவலகத்தில் வேலூர் இப்ராஹிம் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது,

கடந்த 15 ஆண்டுகளுக்கு பிறகு பா.ஜ.க தமிழகத்தில் 4 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.பா.ஜ.க வெற்றி பெறாது என்று பலரும் கூறிய நிலையில் வெற்றி பெற்றுள்ளோம். வரும் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி எண்ணிக்கை அதிகரிக்கும். தமிழக அரசு கொரோனாவை தவறான முறையில் கையாண்டுள்ளது. அரசு தோல்வி கண்டுள்ளது. மது ஒழிப்பே முதல் கையெழுத்து என்று திமுக அரசு கூறியது. இன்று மதுக்கடையை திறந்து விற்பனையை ஊக்குவிப்பது துரோகம்.

திமுக துரோகம் இழைக்கும் கட்சியாக உள்ளது.எனக்கு பா.ஜ.க தலைமை வழங்கிய பொறுப்பை உணர்ந்து, கட்சியின் வளர்ச்சிக்காக நிர்வாகிகளிடம் கலந்துரையாடி வருகிறேன். திமுக கடந்தகால ஆட்சியில் பின்னடைவை சந்திக்கும் போது, அவர்கள் சில சர்ச்சை பேச்சை பேசி திசை திருப்புவார்கள். அந்தவகையில் தான் கொரோனா விஷயத்தில் அரசு தோற்றுப்போன நிலையில், ஒன்றிய அரசியல் பேசுகின்றனர். இதனால் திமுக எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தப்போவதில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க