• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழக அரசு கொரோனாவை தவறான முறையில் கையாண்டுள்ளது – கோவையில் வேலூர் இப்ராஹிம் பேட்டி

June 17, 2021 தண்டோரா குழு

கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதில் தமிழக அரசு மிகப்பெரிய தோல்வியை கண்டுள்ளது என்று பா.ஜ.க சிறுபான்மையினர் பிரிவின் தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பா.ஜ.க மாவட்ட தலைமை அலுவலகத்தில் வேலூர் இப்ராஹிம் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது,

கடந்த 15 ஆண்டுகளுக்கு பிறகு பா.ஜ.க தமிழகத்தில் 4 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.பா.ஜ.க வெற்றி பெறாது என்று பலரும் கூறிய நிலையில் வெற்றி பெற்றுள்ளோம். வரும் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி எண்ணிக்கை அதிகரிக்கும். தமிழக அரசு கொரோனாவை தவறான முறையில் கையாண்டுள்ளது. அரசு தோல்வி கண்டுள்ளது. மது ஒழிப்பே முதல் கையெழுத்து என்று திமுக அரசு கூறியது. இன்று மதுக்கடையை திறந்து விற்பனையை ஊக்குவிப்பது துரோகம்.

திமுக துரோகம் இழைக்கும் கட்சியாக உள்ளது.எனக்கு பா.ஜ.க தலைமை வழங்கிய பொறுப்பை உணர்ந்து, கட்சியின் வளர்ச்சிக்காக நிர்வாகிகளிடம் கலந்துரையாடி வருகிறேன். திமுக கடந்தகால ஆட்சியில் பின்னடைவை சந்திக்கும் போது, அவர்கள் சில சர்ச்சை பேச்சை பேசி திசை திருப்புவார்கள். அந்தவகையில் தான் கொரோனா விஷயத்தில் அரசு தோற்றுப்போன நிலையில், ஒன்றிய அரசியல் பேசுகின்றனர். இதனால் திமுக எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தப்போவதில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க