• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கொரோனா கண்காணிப்பு குழு தீவிர கண்காணிப்பு; கிராமங்களில் கூட்டம் கூடுகிறதா?

June 17, 2021 தண்டோரா குழு

கோவை மாவட்டத்தில் உள்ள 228 கிராமங்களிலும் கொரோனா நோய் தொற்று கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு கிராமங்களில் கூட்டம் கூடுகிறதா? என்றும், கல்யாணம், இறப்பு உள்ளிட்ட நிகழ்வுகளில் அரசின் வழிகாட்டு விதிமுறைகள் கடைபிடிக்கப்படுகிறதா? என்றும் தீவிரமாக கண்காணித்து வருகிறது.

கோவை மாவட்டத்தில் உள்ள 228 கிராம ஊராட்சிகளில் கொரோனா நோய் தொற்றினை கட்டுப்படுத்திட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கிராம ஊராட்சி தலைவர், ஊராட்சி செயலாளர், கிராம நிர்வாக அலுவலர், கிராம சுகாதார செவிலியர் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டால் நியமிக்கப்பட்ட காவலர் ஆகியோரை உறுப்பினராக கொண்ட கொரோனா நோய் தொற்று கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

வட்டார மண்டல அலுவலர்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆகியோர் குழு உறுப்பினர்களுடன் இணைந்து வீடு, வீடாக சென்று கொரோனா வைரஸ் தொற்று கணக்கெடுப்பு பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இக்குழு கிராம ஊராட்சி அளவில் கொரோனா சிகிச்சை மையம் ஏற்படுத்தி உள்ளது. 228 ஊராட்சிகளில் 3 ஆயிரம் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இது குறித்து மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் கூறுகையில்,

‘‘கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தி கொள்ள முடியாதவர்களுக்கு இந்த மையத்தில் வைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த சிகிச்சை மையத்திற்கு வருபவர்களுக்கு தேவையான உணவு வழங்கப்படுகிறது. கிராமங்களில் கூட்டம் கூடுவதை கண்காணிக்க தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். கல்யாணம், இறப்பு உள்ளிட்ட நிகழ்வுகளில் அரசின் வழிகாட்டு விதிமுறைகள் கடைபிடிக்கப்படுகிறதா? என்றும் கண்காணிக்கப்படுகிறது’’ என்றார்.

மேலும் படிக்க