• Download mobile app
14 May 2025, WednesdayEdition - 3381
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் மநீம கட்சியின் சார்பாக 300 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்கள்

June 17, 2021 தண்டோரா குழு

கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட மநீம தலைவர் கமல்ஹாசன் சார்பாக, அந்த தொகுதியின் ஒரு பகுதியான கல்லுக்குழி பகுதியில் நேற்று நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது.

300 குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய், மற்றும் மளிகை பொருட்களை, மநீம மாநிலச் செயலாளர்கள் மயில்சாமி, முனைவர் அனுஷா ரவி, மூகாம்பிகா, ரங்கநாதன், பங்கஜ், மாவட்டச் செயலாளர்கள் பிரபு, சத்தியநாராயணன் ஆகியோர் துவக்கி வைக்க, மாநகராட்சி செயலாளர் மணிக்கொடி மற்றும் நிர்வாகிகள் வழங்கினர்.

இது குறித்து கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில்,

அடிப்படை வசதிகளின்றி தவிக்கும் கோவை கல்லுக்குழி மக்களின் வாழ்வை மேலும் கடினமாக்கியது கொரோனா. இங்கு வசிக்கும் 250 குடும்பங்களுக்கு மநீம உறுப்பினர்கள் மளிகைப்பொருட்கள் வழங்கிய செய்தி கேட்டு மகிழ்கிறேன். விரைவில் நானும் என் நன்றியையும் அன்பையும் தெரிவிக்க இவ்விடங்களுக்கு வருவேன் என பதிவிட்டுள்ளார்

மேலும் படிக்க