• Download mobile app
14 May 2025, WednesdayEdition - 3381
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் இல்லம் தேடி இலவச ஆக்சிஜன் எனும் புதிய சேவை துவக்கம் !

June 17, 2021 தண்டோரா குழு

கோவை சென்னை மொபைல்ஸ் சேரிட்டபிள் டிரஸ்ட் சார்பாக உங்கள் இல்லம் தேடி இலவச ஆக்சிஜன் எனும் சேவை துவங்கப்பட்டுள்ளது.

கொரானா வைரஸ் இரண்டாவது அலை பரவலில் பாதிக்கபட்டு ஆக்சிஜன் கிடைக்காமல் பலர் உயிரிழந்த பரிதாபம் கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஏற்பட்டது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகமானதால், ஆஸ்பத்திரிகளிலும் இடமில்லாமலும், ஆக்சிஜன் தட்டுப்பாடும் ஏற்பட்டது.

இந்நிலையில் ஆக்சிஜன் கிடைக்காமல் ஒரு உயிரும் போக கூடாது எனும் நோக்கத்தில் கோவை சென்னை மொபைல்ஸ் சேரிட்டபிள் டிரஸ்ட் சார்பாக உங்கள் இல்லம் தேடி இலவச ஆக்சிஜன் எனும் சேவை துவங்கப்பட்டுள்ளது. அதன் படி இவர்களுடன் மனித நேயம் பவுண்டேஷன் மற்றும் பசியில்லா தமிழகம் அமைப்பினர் ஆகியோர் இணைந்து கொரோனா பாதித்து, ஐந்து லிட்டர் வரை ஆக்சிஜன் தேவைபடுபவர்களுக்கு ஆக்சிஜன் செறிவூட்டிகளை அவர்களது இல்லத்திற்கே சென்று வழங்கி வருகின்றனர்.

இந்த சேவையை துவக்கி வைத்த சென்னை மொபைல்ஸ் சம்சு அலி மற்றும் ஸ்ரீதேவி சில்க்ஸ் சிவகணேஷ் ஆகியோர் பேசுகையில்,

தற்போது ஆக்சிஜன் தேவை அதிகமாக இருப்பதால் செறிவூட்டிகளை தேவைபடுபவர்களுக்கு அவர்களது இல்லத்திற்கே சென்று தேவைப்படும் நாட்கள் வரை வழங்குவதாகவும்,கோவையை சுற்றி சுமார் முப்பது கிலோ மீட்டர் வரை இந்த சமூக பணிகளை செய்து வருவதாக தெரிவித்தனர்.

துவக்க நிகழ்ச்சியில் மனித நேய பவுண்டேஷன் தலைவர் சுலைமான்,பசியில்லா தமிழகம் முகம்மது அலி ஜின்னா,பிரின்ஸ் நசீர்,ஒரு ரூபாயில் ஒரு உயிர் காஜா மொய்தீன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க