• Download mobile app
05 May 2024, SundayEdition - 3007
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் ஒரே நேரத்தில் இரத்த தானம் செய்த கலெக்டர், கமிஷனர்கள், எஸ்.பி !

June 14, 2021 தண்டோரா குழு

கோவை அரசு மருத்துவமனையில் உலக இரத்ததான தினத்தை முன்னிட்டு ஆட்சியர் மற்றும் உயர் அதிகாரிகள் ஒரே நேரத்தில் இரத்ததானம் செய்தனர்.

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 14 ஆம் தேதி உலக இரத்ததான தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த நிலையில் இன்று கோவை மாவட்டத்தில் உயரதிகாரிகள் ஒன்றிணைந்து ஒரே நேரத்தில்
இரத்த தானம் செய்தனர்.

கோவை அரசு மருத்துவமனையில் கோவை மாவட்ட ஆட்சியர் நாகராஜன், மாநகர காவல் ஆணையர் தீபக் எம்.டாமோர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம்,
மேற்கு மண்டல ஐஜி சுதாகர்,மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுங்கரா ஆகியோர் விழிப்புணர்வை ஏற்படுத்த இரத்த தானம் செய்தனர்.

உயர் அதிகாரிகள் அனைவரும் ஒன்றிணைந்து இரத்த தானம் செய்த நிகழ்வு அனைவராலும் பாராட்டுகளை பெற்றுள்ளது.

மேலும் படிக்க