• Download mobile app
29 Mar 2026, SundayEdition - 3700
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் ஒரே நேரத்தில் இரத்த தானம் செய்த கலெக்டர், கமிஷனர்கள், எஸ்.பி !

June 14, 2021 தண்டோரா குழு

கோவை அரசு மருத்துவமனையில் உலக இரத்ததான தினத்தை முன்னிட்டு ஆட்சியர் மற்றும் உயர் அதிகாரிகள் ஒரே நேரத்தில் இரத்ததானம் செய்தனர்.

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 14 ஆம் தேதி உலக இரத்ததான தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த நிலையில் இன்று கோவை மாவட்டத்தில் உயரதிகாரிகள் ஒன்றிணைந்து ஒரே நேரத்தில்
இரத்த தானம் செய்தனர்.

கோவை அரசு மருத்துவமனையில் கோவை மாவட்ட ஆட்சியர் நாகராஜன், மாநகர காவல் ஆணையர் தீபக் எம்.டாமோர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம்,
மேற்கு மண்டல ஐஜி சுதாகர்,மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுங்கரா ஆகியோர் விழிப்புணர்வை ஏற்படுத்த இரத்த தானம் செய்தனர்.

உயர் அதிகாரிகள் அனைவரும் ஒன்றிணைந்து இரத்த தானம் செய்த நிகழ்வு அனைவராலும் பாராட்டுகளை பெற்றுள்ளது.

மேலும் படிக்க