• Download mobile app
19 May 2025, MondayEdition - 3386
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நீலிக்கோணம்பாளையம் பகுதியில் சாக்கடை பிரச்னையை தீர்க்க கோரி பொது மக்கள் கோரிக்கை

June 13, 2021 தண்டோரா குழு

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 62 வது வார்டு நீலிக்கோணம்பாளையம் பகுதியில் நீண்ட காலமாக உள்ள சாக்கடை பிரச்னையை தீர்க்க கோரி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் பாதாள சாக்கடை பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 62 வது வார்டு வரதராஜபுரம் மேடு, நீலிக்கோணம்பாளையம் பகுதியில் நீண்ட காலமாக மழை நீர் வடிகால் அமைக்காததால் மழை நீர் மற்றும் கழிவு நீர் சரி வர செல்லாததால் சாலைகளில் சாக்கடை நீர் வழிந்தோடுகிறது.

கடந்த முப்பது ஆண்டுகளாக இதே நிலை இந்த பகுதியில் நீடிப்பதாகவும், குறிப்பாக கடந்த இரண்டு முறையும் இந்த தொகுதி எதிர்கட்சி சட்டமன்ற தொகுதி உறுப்பினர்களே இருப்பதால் எங்களது கோரிக்கை தொடர்ந்து நிராகரிக்க படுவதாக அந்த பகுதி பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் அந்த பகுதிக்கு வந்து ஆய்வு செய்த தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர்.ஜெயராம் அந்த பகுதி மக்களின் சாக்கடை பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என உறுதி அளித்துள்ளார்.

மேலும் படிக்க