• Download mobile app
14 May 2025, WednesdayEdition - 3381
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஒரிரு வாரங்களில் கொரோனா இல்லாத மாநிலமாக தமிழகம் மாறும் -அமைச்சர் பெரிய கருப்பன் பேட்டி!

June 10, 2021 தண்டோரா குழு

கோவை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரிய கருப்பன் நேற்று கோவை ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் வனத்துறை அமைச்சர் ராமசந்திரன், உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, கலெக்டர் நாகராஜன் உள்பட முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்திற்கு பின்னர் அமைச்சர் பெரியகருப்பன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி பொறுப்பேற்ற தினத்தில் இருந்து ஒரு மாத காலமாக கொரொனா தொற்றை தடுப்பதில் இந்த அரசு முழு கவனம் செலுத்தி வருகின்றது. அரசின் நடவடிக்கைகளால் தமிழகத்தில் ஒரு மாத காலத்தில் கொரோனா தொற்று 50 சதவீதம் அளவிற்கு குறைந்து உள்ளது.ஒரிரு வாரங்களில் கொரோனா இல்லாத மாநிலமாக தமிழகம் மாறும் நிலை ஏற்பட்டு உள்ளது.

மத்திய அரசிடம் இருந்து தமிழகத்தற்கு தேவையான கொரோனா ஊசிகளை பெறுவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.நகர் பகுதிகளில் மட்டுமில்லாமல் புறநகர் பகுதிகளிலும் தொற்று இருப்பதால் கிராமங்களில் மேற்கொள்ளபடும் பணிகள் ஆய்வு செய்யப்பட்டது.மாவட்டத்தில் அனைத்து கொரோனா தடுப்பு பணிகளும் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.

கோவை மாவட்டத்தில் தொற்று பரவல் 50 சதவீதம் அளவு குறைந்து இருக்கின்றது. கோவை மாவட்டத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இல்லை என்பதால் சிலர் கொரோனா தொற்றை அரசியலாக்க முயல்கின்றனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடப்பவர் இல்லை. அவர் பதவி ஏற்ற 30 நாட்களுக்குள் இரு முறை கோவை வந்து ஆய்வு கூட்டங்கள் நடத்தி தொற்றை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுத்துள்ளார்.

மேலும் கொரோனா பாதித்த நோயாளிகளை நேரில் சென்று ஆறுதல் தெரிவித்து உள்ளார்.
கோவையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் நிவாரண உதவிகள், நோய்தடுப்பு பணிகள் என அவர்களே நேரடியாக முயற்சிக்காமல் மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம் மூலம் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். அரசியல் ஆதாயத்திற்காக குட்டையை குழப்பும் வேலையை அவர்கள் செய்யக் கூடாது. தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுகின்றேன் என்ற போர்வையில் மக்களுக்கு நெருக்கடியை கோவை மாவட்ட அ.தி.மு.க. எம்.எல்.ஏ க்கள் ஏற்படுத்த கூடாது. எல்லோரும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று முதலமைச்சர் தெரிவித்து உள்ளார்.

தற்போது யுத்த காலத்தில் இருப்பதால் கொரொனா தடுப்பு பணிகளில் மட்டும் கவனம் செலுத்தப்படுகின்றது. தேர்தல் அறிக்கை மற்றும் பிரச்சாரத்தின் போது கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் கட்டாயம் நிறைவேற்றபடும். கோவை மாவட்டத்தில் படிப்படியாக கொரோனா தொற்று இறப்பும் குறையும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக அமைச்சர் பெரியகருப்பன் சூலூர் கிட்டாம்பாளையம் ஊராட்சியில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் படிக்க