• Download mobile app
29 Mar 2026, SundayEdition - 3700
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் வீட்டில் இருந்தபடியே மருத்துவர்கள் ஆலோசனை பெற மாநகராட்சி சார்பில் புதிய செயலி அறிமுகம்

June 10, 2021 தண்டோரா குழு

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு லேசானா அறிகுறி உள்ளவர்கள் வீட்டில் இருந்தபடியே மருத்துவர்கள் ஆலோசனை பெற கோவை மாநகராட்சி சார்பில் புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பில் கோவை மாவட்டம் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது.மாவட்ட நிர்வாகமும் மாநகராட்சியும் இணைந்து போர்கால அடிப்படையில் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் காரணமாக நோய் தொற்றின் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது.

தொற்று பாதித்தவர்கள் மருத்துவமனையில் உள்ள படுக்கை வசதிகள் உள்ளிட்ட உதவிகள் பெற கோவையில் மூன்று கட்டுபாட்டு அறையில் 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் லேசான தொற்று அறிகுறியுடன் வீட்டில் தனிமைபடுத்தி கொண்டவர்கள் மருத்துவ ஆலோசனை பெறுவதற்கு கோவை மாநகராட்சி சார்பில் தனியார் நிறுவனத்துடன் இணைந்து CBE CORP VMed என்ற புதிய ஆண்ட்ராய்டு செயலியை அறிமுகம் செய்துள்ளது.

இதன் செயல்பாட்டை கோவை ஆர்.எஸ்.புரம் கலையரங்த்தில் மாநகராட்சி கமிஷனர் குமாரவேல் பாண்டியன் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார்.

இது குறித்து மாநகர சுகாதார அலுவலர் ராஜா கூறுகையில்,

“லேசான தொற்று பாதிப்பு உள்ளவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வரும்போது பரவல் அதிகரிக்க வாய்புள்ளதால் வீட்டில் இருந்தபடியே மருத்துவர்களின் ஆலோசனைகளை வீடியோ கால் மூலம் பெற்று கொள்ளவதுடன் பரிந்துரை சீட்டையும், இந்த செயலியின் மூலம் பதிவிறக்கம் செய்து கொண்டு அதனை மருந்தகங்களில் காண்பித்து மாத்திரைகள் பெற்று கொள்ளலாம்.

மேலும் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் ஆறு மருத்துவர்கள் இதற்காக பணியமர்த்தபட்டு உள்ளனர். அழைப்புகள் அதிகரிக்கும் பட்சத்தில் கூடுதல் மருத்துவர்கள் பணியமர்த்த படுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க