• Download mobile app
14 May 2025, WednesdayEdition - 3381
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தெற்கு மண்டலத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் மாநகராட்சி கமிஷனர் ஆய்வு

June 9, 2021 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் 86 வது வார்டுக்குட்பட்ட செல்வபுரம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையத்தை மாநகராட்சி கமிஷனர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு வரும் பொதுமக்களுக்கு அளிக்கும் சிகிச்சை முறைகள் குறித்து செவிலியர்களிடம் கேட்டறிந்தார்.

பின்னர் 76 வது வார்டு முத்துசாமி காலனி பகுதியில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளை நேரில் பார்வையிட்ட அவர், தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளில் வசிப்பவர்களிடம் தேவையான அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்கின்றதா? தினசரி களப்பணியாளர்கள் வருகின்றார்களா? என்பது குறித்தும் கேட்டறிந்தார்.

அதனைத் தொடர்ந்து அப்பகுதியில் மாநகராட்சி சார்பில் நடைபெற்ற மருத்துவ முகாமினை நேரில் பார்வையிட்டு மாநகராட்சி கமிஷனர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது தெற்கு மண்டல கண்காணிப்பு அலுவலர் ப.காந்திமதி, தெற்கு மண்டல உதவி கமிஷனர் சரவணன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

மேலும் படிக்க