• Download mobile app
10 Feb 2026, TuesdayEdition - 3653
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தெற்கு மண்டலத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் மாநகராட்சி கமிஷனர் ஆய்வு

June 9, 2021 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் 86 வது வார்டுக்குட்பட்ட செல்வபுரம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையத்தை மாநகராட்சி கமிஷனர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு வரும் பொதுமக்களுக்கு அளிக்கும் சிகிச்சை முறைகள் குறித்து செவிலியர்களிடம் கேட்டறிந்தார்.

பின்னர் 76 வது வார்டு முத்துசாமி காலனி பகுதியில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளை நேரில் பார்வையிட்ட அவர், தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளில் வசிப்பவர்களிடம் தேவையான அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்கின்றதா? தினசரி களப்பணியாளர்கள் வருகின்றார்களா? என்பது குறித்தும் கேட்டறிந்தார்.

அதனைத் தொடர்ந்து அப்பகுதியில் மாநகராட்சி சார்பில் நடைபெற்ற மருத்துவ முகாமினை நேரில் பார்வையிட்டு மாநகராட்சி கமிஷனர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது தெற்கு மண்டல கண்காணிப்பு அலுவலர் ப.காந்திமதி, தெற்கு மண்டல உதவி கமிஷனர் சரவணன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

மேலும் படிக்க