• Download mobile app
14 May 2025, WednesdayEdition - 3381
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஒடிசாவில் இருந்து கோவைக்கு 64 மெட்ரிக் டன் ஆக்சிஜன் வந்தது

June 4, 2021 தண்டோரா குழு

கொரோனா தொற்று 2-வது அலையின் போது பெரும்பாலனவர்களுக்கு அதிகளவு மூச்சு திணறல் ஏற்பட்டது.இதையடுத்து அவர்களுக்கு மருத்துவ ஆக்சிஜன் வழங்கப்பட்டது.

நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்ததால் பிற மாநிலங்களில் இருந்து மருத்துவ ஆக்சிஜன் அதிகளவு கொண்டு வரப்பட்டது.இந்நிலையில் ஒடிசா மாநிலத்தில் இருந்து கோவைக்கு மருத்துவ ஆக்சிஜன் ரயில்கள் மூலம் கொண்டு வரப்ப டுகிறது. இதன் ஒரு பகுதியாக ஒடிசா மாநிலத்தில் இருந்து 64.86 மெட்ரிக் டன் ஆக்சிஜனை ஏற்றிக்கொண்ட ரயில் இன்று காலை 9.30 மணிக்கு மதுக்கரை ரயில் நிலையத்தை வந்தடைந்தது.

பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் மருத்துவ ஆக்சிஜன் லாரிகள் அந்தந்த மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில்,

“கோவைக்கு ஆறாவது முறையாக மருத்துவ ஆக்சிஜன் கொண்ட ரயில் இன்று வந்தது. இதுவரை கோவைக்கு ரயில் மூலம் 300 மெட்ரிக்டன் ஆக்சிஜன் வந்துள்ளது,” என்றார்.

மேலும் படிக்க