• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஒடிசாவில் இருந்து கோவைக்கு 64 மெட்ரிக் டன் ஆக்சிஜன் வந்தது

June 4, 2021 தண்டோரா குழு

கொரோனா தொற்று 2-வது அலையின் போது பெரும்பாலனவர்களுக்கு அதிகளவு மூச்சு திணறல் ஏற்பட்டது.இதையடுத்து அவர்களுக்கு மருத்துவ ஆக்சிஜன் வழங்கப்பட்டது.

நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்ததால் பிற மாநிலங்களில் இருந்து மருத்துவ ஆக்சிஜன் அதிகளவு கொண்டு வரப்பட்டது.இந்நிலையில் ஒடிசா மாநிலத்தில் இருந்து கோவைக்கு மருத்துவ ஆக்சிஜன் ரயில்கள் மூலம் கொண்டு வரப்ப டுகிறது. இதன் ஒரு பகுதியாக ஒடிசா மாநிலத்தில் இருந்து 64.86 மெட்ரிக் டன் ஆக்சிஜனை ஏற்றிக்கொண்ட ரயில் இன்று காலை 9.30 மணிக்கு மதுக்கரை ரயில் நிலையத்தை வந்தடைந்தது.

பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் மருத்துவ ஆக்சிஜன் லாரிகள் அந்தந்த மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில்,

“கோவைக்கு ஆறாவது முறையாக மருத்துவ ஆக்சிஜன் கொண்ட ரயில் இன்று வந்தது. இதுவரை கோவைக்கு ரயில் மூலம் 300 மெட்ரிக்டன் ஆக்சிஜன் வந்துள்ளது,” என்றார்.

மேலும் படிக்க